“ஆடை”.. பரபரப்பான கதைக்களத்தில் நடிக்கும் அமலாபால்!
Recommended Video

சென்னை: மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமாரின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார் அமலா பால்.
முதல் படமான மேயாத மான் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது இவர் தனது அடுத்த படத்தை இயக்க தயாராகியுள்ளார்.

உணர்ச்சிகரமான கதை களத்தை கொண்ட இந்த படத்தில் நாயகியாக அமலாபால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கையில் காயத்துடன் சிகிச்சைப் பெற்று வரும் அமலாபால், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தை நழுவ விடக்கூடாது என்பதாலேயே, மற்ற சில பட வாய்ப்புகளை தவிர்த்து, இதற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.
நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட மற்ற படங்களில் இருந்து வேறுபட்டு, இந்த படம் முன் கணிப்புகளை உடைத்தெறியும் வகையில் உணர்ச்சிகரமான, பரபரப்பான திரைக்கதையுடன் உருவாக்கப்படுவதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.
"ஆடை" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மற்ற கதா பாத்திரங்களுக்கான தேர்வு நடை பெற்று வருகிறது . விரைவில் படத்தை பற்றிய முழு விபரம் வெளியிடப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











