Don't Miss!
- News யோசிக்கவேயில்லை.. அண்ணாமலை அப்பதான் விபூதி வெச்சாரு.. அதுக்குள்ள குபீர்னு ரூ.500.. நம்ம கோவையில்தான்
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
“ஆடை”.. பரபரப்பான கதைக்களத்தில் நடிக்கும் அமலாபால்!
Recommended Video
சென்னை: மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமாரின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார் அமலா பால்.
முதல் படமான மேயாத மான் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது இவர் தனது அடுத்த படத்தை இயக்க தயாராகியுள்ளார்.
உணர்ச்சிகரமான கதை களத்தை கொண்ட இந்த படத்தில் நாயகியாக அமலாபால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கையில் காயத்துடன் சிகிச்சைப் பெற்று வரும் அமலாபால், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தை நழுவ விடக்கூடாது என்பதாலேயே, மற்ற சில பட வாய்ப்புகளை தவிர்த்து, இதற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.
நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட மற்ற படங்களில் இருந்து வேறுபட்டு, இந்த படம் முன் கணிப்புகளை உடைத்தெறியும் வகையில் உணர்ச்சிகரமான, பரபரப்பான திரைக்கதையுடன் உருவாக்கப்படுவதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.
"ஆடை" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மற்ற கதா பாத்திரங்களுக்கான தேர்வு நடை பெற்று வருகிறது . விரைவில் படத்தை பற்றிய முழு விபரம் வெளியிடப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.