Don't Miss!
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அஞ்சலின்னாங்க, ஸ்ரேயான்னாங்க, இப்ப அமலாபாலும் இல்லை.. அந்த சீனியர் ஹீரோவுக்கு யார்தான் ஹீரோயின்?
ஐதராபாத்: அந்த சீனியர் ஹீரோ ஜோடியாக நடிகை அமலா பாலும் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சினிமாவில் சீனியர் ஹீரோக்களுக்கு ஹீரோயின் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. குறிப்பாக தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர்களுக்கு இந்த சிக்கல் தொடர்கிறது.
சிரஞ்சீவி நடிக்கும் படத்துக்கும் இந்த சிக்கல் இருந்தது. பிறகு அவர் மகன் ராம் சரண் சொன்னதை அடுத்து காஜல் அகர்வால் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
சுஷாந்த் சிங்கின் மேனேஜர் கர்ப்பமா? வெளியானது திடுக்கிடும் தகவல் !
பாலகிருஷ்ணா
இதே போல தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான பாலகிருஷ்ணாவுக்கும் ஹீரோயின் கிடைப்பதில் சிக்கல். இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். நடிகரும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமாராவின் மகன் இவர். பட வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகைகள் கூட இவருக்கு ஜோடியாக நடிக்க தயங்குகின்றனர்.
லாக்டவுனுக்கு முன்
சீனியர் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்தால் இளம் ஹீரோக்கள் நடிக்க அழைக்க மாட்டார்கள் என்பது நடிகைகளின் தயக்கத்துக்கு காரணம். இந்நிலையில், பாலகிருஷ்ணா அடுத்து நடிக்கும் படத்தை போயபதி ஶ்ரீனு இயக்குகிறார். இந்தப் படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இந்தப் படம் லாக்டவுனுக்கு முன்பே தொடங்கி இருக்க வேண்டும்.
கேத்தரின் தெரசா
ஹீரோயின் கிடைப்பதில் சிக்கல் இருந்ததால் படம் தொடங்கவில்லை. முதலில் கேத்தரின் தெரசாவை கேட்டனர். அவர் அதிக சம்பளம் கேட்டு தவிர்த்தார். அடுத்து சோனாக்ஷி சின்ஹாவை கேட்டனர். அவர் கால்ஷீட் இல்லை என்று கைவிரித்துவிட்டார். பின்னர் ஸ்ரேயா நடிப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் புதிதாக இவர்கள் லிஸ்ட்டில் அமலா பால் சேர்ந்தார்.
Recommended Video
அமலா பாலும் இல்லை
அவர் இந்தப் படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. இது பற்றி தெலுங்கு மீடியாவில் செய்திகளும் வெளியாயின. ஆனால், இப்போது அமலா பாலும் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி படக்குழு கூறும்போது பாலகிருஷ்ணா ஜோடியாக புதுமுகம் ஒருவர் நடிக்கிறார். ஷூட்டிங், ஆகஸ்ட் இறுதியில் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.