Don't Miss!
- Sports இன்னும் ஒரு வாரம்.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு? 3 வீரர்களை கழற்றிவிடும் ரோகித் சர்மா
- News வலது கை விரலில் தான் ‘மை’ வைக்கணும்.. வாக்குச்சாவடியில் அடம் பிடித்த கோவை நபர்.. விசாரித்ததில் ஷாக்
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Finance பாகிஸ்தானுக்கு ஆயுதம் சப்ளை செய்த சீனா.. கண்டுபிடித்து வெளுத்த அமெரிக்கா..!!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
அமலாபாலுக்கு பாலியல் தொல்லை... சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் கைது!
Recommended Video
சென்னை : நடிகை அமலாபால், கணவரிடம் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். தமிழ், மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அமலாபால் போலீசில் ஒருவர் மீது புகார் செய்துள்ளார்.
தொழிலதிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை அமலாபால், போலீஸில் புகார் செய்தார்.
நடிகை அமலாபால் அளித்த புகாரின் பேரில் கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்.
நடிகை அமலாபால்
நடிகை அமலாபால் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். டைரக்டர் விஜய்யை திருமணம் செய்த இவர் பின்னர் விவாகரத்து பெற்றார். புதுச்சேரி முகவரியில் சொகுசு கார் வாங்கிய வழக்கில் ரூ.20 லட்சம் வரி ஏய்ப்பு செய்ததாக சமீபத்தில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கைது
இந்த வழக்கில் அமலாபால் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரான அமலாபாலை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
டான்ஸ் நிகழ்ச்சியில் அமலாபால்
வரும் பிப்ரவரி 3-ம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ள 'டான்சிங் தமிழச்சி' என்ற பெண்களுக்கான கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். இதற்காக அமலாபால் உள்ளிட்ட நடிகைகள் பலரும் நடனப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
டான்ஸ் பயிற்சி
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகை அமலாபாலும் கடந்த சில தினங்களாகவே தி.நகரில் உள்ள ஸ்ரீதர் மாஸ்டரின் டான்ஸ் ஸ்கூலில் தீவிரமாக நடனப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
பாலியல் தொல்லை
இந்நிலையில், கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் என்பவர் தன்னிடம் பாலியல் ரீதியான அணுகுமுறையோடு பேசியதாகவும், பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் நடிகை அமலாபால் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தொழிலதிபர் கைது
அமலாபாலின் புகாரின் பேரில் கொட்டிவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் அழகேசனை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்மீது பெண்ணின் மாண்புக்கு களங்கம் கற்பித்தல், பாலியல் தொல்லை கொடுத்தல், பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.