Don't Miss!
- News ஓயாத மணிப்பூர் கலவரம்.. பூத்களை கைப்பற்ற முயற்சி? மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
அம்பரீஷின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும், 3 நாட்கள் துக்கம்: கர்நாடக முதல்வர்
Recommended Video
பெங்களூர்: மறைந்த நடிகர் அம்பரீஷின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நாளை நடைபெறும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கன்னட நடிகர் அம்பரீஷ் மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக பெங்களூரில் உள்ள கந்தீரவா ஸ்டேடியத்தில்
வைக்கப்பட்டுள்ளது. அவரின் இறுதிச் சடங்குகள் கந்தீரவா ஸ்டுடியோவில் உள்ள டாக்டர் ராஜ்குமார் ஸ்மாரகா அருகே நடைபெற உள்ளது.
அம்பரீஷின் இறுதிச் சடங்கு நாளை அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் அவரின்
மறைவையொட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அம்பரீஷின் குடும்பத்தார் மற்றும் திரையுலகினரிடம் கலந்தாலோசித்த பிறகே அவரின் இறுதிச் சடங்கு குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக குமாரசாமி தெரிவித்துள்ளார்.
CM HD Kumaraswamy, in consultation with the family and the film industry, has announced that the last rights of the departed leader and film star #Ambareesh will be conducted near Dr Rajkumar Smaraka at Kanteerava Studio, Bengaluru, with state honours on Monday(26-11-2018). pic.twitter.com/1tHmTKtymU
— CM of Karnataka (@CMofKarnataka) November 24, 2018
அம்பரீஷின் உடல் வைக்கப்பட்டுள்ள கந்தீரவா ஸ்டேடியத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல
சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.
அம்பரீஷின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரையுலக பிரபலங்கள் பலர் ஸ்டேடியத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.