Don't Miss!
- News தமிழகத்தில் குறைந்த வாக்குப்பதிவு.. "அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும்.." என்ன காரணம் தெரியுமா
- Sports DC vs SRH : 22 சிக்ஸ், 18 ஃபோர்ஸ்.. ஈஏ கிரிக்கெட் விளையாடிய ட்ராவிஸ் ஹெட்.. நொந்துபோன டெல்லி அணி!
- Technology குறிவைத்து தாக்கும் BrahMos ஏவுகணை.. இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் வாங்கிய ஆயுதம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
ராஞ்ஜ்ஹனா வரும்... ஆனா, அம்பிகாபதி வராது!
தமிழின் முன்னணி நடிகர் தனுஷ் முதல் முறையாக நடித்த இந்திப் படம் ராஞ்ஜ்ஹனா. ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சோனம் கபூர் ஜோடியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தை தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் டப் செய்துள்ளனர்.
வரும் ஜூன் 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது ராஞ்ஜ்ஹனா. இந்தியிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் அந்தத் தேதியில்தான் தனுஷ் நடித்த நேரடி தமிழ்ப் படமான மரியான வெளியாகிறது.
தமிழில் தனுஷ், ரஹ்மானுக்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. ஒரே நேரத்தில் ராஞ்ஜ்ஹனா, அம்பிகாபதி, மரியான் என மூன்றையும் வெளியிடுவது சரியாக இருக்காது என்பதால், அம்பிகாபதியை நிறுத்தி வைக்க அதன் வெளியீட்டாளரான ஈராஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஜூன் 21-ம் தேதி ராஞ்ஜ்ஹனாவும் மரியானும் மட்டும் வெளியாகும். அம்பிகாபதி வேறொரு நாளில் வெளியாகும்.
தனுஷின் '3' படத்தின் இந்திப் பதிப்பை இப்படித்தான் தள்ளிப்போட்டனர். ஆனால் அது இன்றுவரை வெளியானபாடில்லை, இந்தியில். இதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!