Don't Miss!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- News ஆக்கிரமிப்பு நிலமா? எவ வேலுவின் மனைவி தலைவராக உள்ள கல்லூரி உரிமத்தை ரத்து செய்ய மறுத்த ஹைகோர்ட்
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Finance புது ATM கார்டு ரூல்ஸ்.. இனி ஆன்லைன் மோசடிக்கு வாய்ப்பே இல்ல!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சினிமாவில் சாதிக்க என்ன தேவை?: கல்லூரி மாணவர்களிடம் ரகசியம் சொன்ன அமீர்
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறை சார்பில் பானரோமியா 2019கே கலை விழாவில் இயக்குநர் அமீர் பங்கேற்று மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரை வழங்கினார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறை 12 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. இதில் படித்த மாணவர்கள் சினிமா மற்றும் ரேடியோ துறையில் சாதனை படைத்து வருகிறார்கள். வருடம் தோறும் இந்த துறை சார்பில் கலை விழா நடைபெறும். இந்த ஆண்டு பானரோமியா 2019கே கலை விழா கல்லூரி வளாகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் 22 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்து பேசினார். காட்சி தொடர்பில் துறை பேராசிரியர் நாகேந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். காட்சி தொடர்பியல் துறை தலைவர் முனைவர் டி. சைலஜா, பேராசிரியர் சங்கரி, பேராசிரியர் மோசஸ், பேராசிரியர் இதியோன், திருச்சி ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
காட்சி தொடர்பியல் துறை சார்பில் பானரோமியா 2019கே கலை விழாவை தொடங்கி வைத்து சினிமா இயக்குநர் மற்றும் நடிகர் அமீர் பேசியதாவது,
'விஸ்வாசம்' பற்றி ட்வீட் போட்ட அமேசான் பிரைம்: கொந்தளித்த தல ரசிகர்கள்
இந்த கல்லூரி விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் சொந்த ஊரில் இருக்கிற காரணத்தினால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஓப்புக்கொண்டேன். சினிமாவில் அவ்வளவு சுலபமாக சாதிக்க முடியாது. இந்த துறையில் நான் நிறைய கஷ்டங்களை அனுபவித்துள்ளேன்.
நான் ராம் படத்தை இயக்கி அந்த படம் நல்ல முறையில் ஓடியது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுவும் சர்வதேச அளவில் விருது கிடைத்தது. ஆனால் விருது கிடைத்தும் ஊக்குவிக்க யாரும் முன் வரவில்லை. ஆகையால் சாதிக்க வேண்டும் என்றால் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், வெற்றி பெறலாம் என்றார்.
பின்னர் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். விழாவில் குறும்படம், போட்டோகிராபி, ரேடியோ ஜாக்கி, மைம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை நாகர்கோவில் தக்கலை நூருல் இஸ்லாம் கல்லூரியும், இரண்டாவது பரிசை திருச்சி தந்தை பெரியார் கல்லூரியும் வென்றது. மாலையில் நடைபெற்ற விழாவில் மக்கள் குரல் மற்றும் டிரினிட்டி மிரர் நாளிதழின் மேலாளர் தீனதயாளன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
-
Baakiyalakshmi: கலர் கலராக சட்டைகள் போட்டு போட்டோஸ்.. பழனிச்சாமியின் புகைப்படங்களை பார்த்த பாக்கியா!
-
வேலுவுடன் கூட்டணி சேர்ந்த மனோகரி.. சிக்கலில் சிக்கும் சுடர்..நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
-
அங்க கை வெச்சு.. ஷூட்டிங் ஸ்பாட்ல இயக்குநர் தப்பா நடந்துக்குட்டார்.. நயன்தாரா பட நடிகை பகீர்