Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சினிமாவில் சாதிக்க என்ன தேவை?: கல்லூரி மாணவர்களிடம் ரகசியம் சொன்ன அமீர்
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறை சார்பில் பானரோமியா 2019கே கலை விழாவில் இயக்குநர் அமீர் பங்கேற்று மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரை வழங்கினார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறை 12 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. இதில் படித்த மாணவர்கள் சினிமா மற்றும் ரேடியோ துறையில் சாதனை படைத்து வருகிறார்கள். வருடம் தோறும் இந்த துறை சார்பில் கலை விழா நடைபெறும். இந்த ஆண்டு பானரோமியா 2019கே கலை விழா கல்லூரி வளாகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் 22 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்து பேசினார். காட்சி தொடர்பில் துறை பேராசிரியர் நாகேந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். காட்சி தொடர்பியல் துறை தலைவர் முனைவர் டி. சைலஜா, பேராசிரியர் சங்கரி, பேராசிரியர் மோசஸ், பேராசிரியர் இதியோன், திருச்சி ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
காட்சி தொடர்பியல் துறை சார்பில் பானரோமியா 2019கே கலை விழாவை தொடங்கி வைத்து சினிமா இயக்குநர் மற்றும் நடிகர் அமீர் பேசியதாவது,
'விஸ்வாசம்' பற்றி ட்வீட் போட்ட அமேசான் பிரைம்: கொந்தளித்த தல ரசிகர்கள்
இந்த கல்லூரி விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் சொந்த ஊரில் இருக்கிற காரணத்தினால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஓப்புக்கொண்டேன். சினிமாவில் அவ்வளவு சுலபமாக சாதிக்க முடியாது. இந்த துறையில் நான் நிறைய கஷ்டங்களை அனுபவித்துள்ளேன்.
நான் ராம் படத்தை இயக்கி அந்த படம் நல்ல முறையில் ஓடியது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுவும் சர்வதேச அளவில் விருது கிடைத்தது. ஆனால் விருது கிடைத்தும் ஊக்குவிக்க யாரும் முன் வரவில்லை. ஆகையால் சாதிக்க வேண்டும் என்றால் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், வெற்றி பெறலாம் என்றார்.
பின்னர் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். விழாவில் குறும்படம், போட்டோகிராபி, ரேடியோ ஜாக்கி, மைம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை நாகர்கோவில் தக்கலை நூருல் இஸ்லாம் கல்லூரியும், இரண்டாவது பரிசை திருச்சி தந்தை பெரியார் கல்லூரியும் வென்றது. மாலையில் நடைபெற்ற விழாவில் மக்கள் குரல் மற்றும் டிரினிட்டி மிரர் நாளிதழின் மேலாளர் தீனதயாளன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.