Just In
- 23 min ago
எனக்கா ரெட் கார்டு.. உள்ளே இருந்தபோது என் ஃபிரண்ட்ஸே நம்பிக்கை துரோகம் பண்ணாங்க.. பாலாஜி உருக்கம்!
- 1 hr ago
முதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்!
- 1 hr ago
நயன்தாராவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம் போலயே.. சம்யுக்தாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டும் ரசிகர்கள்!
- 1 hr ago
பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
Don't Miss!
- Sports
இமாலய வெற்றி... பாராட்டுக்களால் திக்குமுக்காடும் இந்திய வீரர்கள்... தமிழ் பிரபலங்கள் பாராட்டு!
- Education
ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் கோவையிலேயே தமிழக அரசு வேலை வேண்டுமா?
- Finance
91,000 பேருக்கு வேலை.. அசத்தும் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ.. மாணவர்களுக்கு ஜாக்பாட்!
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- News
கொரோனா தடுப்பூசியா...தயங்கும் தமிழக சுகாதார பணியாளர்கள்
- Lifestyle
புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்திலிருந்து அமீர் நீக்கம்!
பெப்சி பிரச்சினையின் தொடர் விளைவாக அமீர் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் கதையில் செய்யப்பட்ட சில மாற்றங்கள் காரணமாக அமீர் இப்படத்தில் நடித்தவில்லை என்றும், எனது அடுத்த படத்தில் அமீர் நிச்சயம் இடம்பெறுவார் என்றும் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்திற்கும், தொழிலாளர் சங்கத்திற்கும் இடையே உள்ள பிரச்சினையில் அமீர் மையப்புள்ளியாக இருப்பதாலும், சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கம் அவர் மீது தடை விதித்திருப்பதாலும்தான் பாரதிராஜா தனது படத்தில் இருந்து அமீரை நீக்கிவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.
ஆனால் இதனை மறுத்தார் பாரதிராஜா.
ஏற்கனவே இப்படத்தில் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் பார்த்திபன். போட்டோ ஷூட் முடிந்த நிலையில் அவரை நீக்கிவிட்டு அமீரை ஒப்பந்தம் செய்தார் பாரதிராஜா. இப்போது அமீரும் நீக்கப்பட்டுவிட்டார்.
அமீரின் கதாபாத்திரத்தில் தனது மகன் மனோஜையே நடிக்க வைக்க பாரதிராஜா முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் கோ பட நாயகி கார்த்திகாவும், வாகை சூட வா பட நாயகி இனியாவும் நடிக்கின்றனர். இப்படத்தில் நடிகை ரோஜா மிக முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஏற்கெனவே அமீரை வைத்து எடுத்த காட்சிகளை நீக்கிவிட்டு புதிகாக எடுக்கிறார் பாரதிராஜா.
இந்தப் படத்தின் தொடக்க விழாவுக்காக பாரதிராஜா தனது சொந்த ஊரான தேனி அல்லி நகரத்துக்கே தமிழ் திரையுலகையே வரவழைத்து பெரிய விழா நடத்தி படத்தை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.