பாரதிராஜா படத்திலிருந்து அமீர் விலகல்?

காரணம், பெப்சியின் ஊதியப் பிரச்சினை. இனி ஊதிய ஒப்பந்தமெல்லாம் கிடையாது... எங்கள் இஷ்டம்தான் என்று தயாரிப்பாளர்கள் தடாலடியாக அறிவித்துவிட்ட நிலையில், பெப்சி அடுத்த கட்ட போராட்டத்தை ரொம்ப கவனத்துடன் முன்னெடுத்துள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா தயாரிப்பாளர்கள் பக்கம் நிற்கிறார். இனி எனக்கு வசதியான ஆட்களை வைத்து வேலை வாங்கிக் கொள்கிறேன் என தனது பரிவாரத்துடன் போய் தேனியில் முகாமிட்டுவிட்டார், தனது அன்னக் கொடியும் கொடி வீரனும் படத்துக்காக.
ஆனால் இந்தப் படத்தின் நாயகன் இயக்குநர் அமீர் பெப்சியின் பக்கம் நிற்கிறார். பெப்சியின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாத நிலையில், இயக்குநர் சங்க பொதுச் செயலர் என்ற முறையில் இயக்குநர்களின் சம்பள உயர்வை அமீரே அறிவித்துவிட, இது இன்னும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், அன்னக் கொடியும் கொடிவீரனும் படப்பிடிப்பை தொடங்கிவிட்டார் பாரதிராஜா. ஆனால் படப்பிடிப்புக்குப் போக வேண்டிய அமீரோ சென்னையிலேயே உட்கார்ந்துவிட்டார்.
இதனால் பாரதிராஜாவின் படத்திலிருந்து அமீர் விலகல் என்று செய்திகள் றெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்துள்ளன. விஷயத்தை உறுதிப்படுத்தாமல் இயக்குநர் பாரதிராஜா மவுனம் காக்கிறார். இந்தப் பக்கம் அமீரோ, பாரதிராஜாவின் ரியாக்ஷனைப் பார்த்துவிட்டு பேசலாம் என அமைதி காக்கிறார்.
ஏற்கெனவே இந்தப் படத்துக்கு ஹீரோவாக ஒப்பந்தமானவர் இயக்குநர் பார்த்திபன். பின்னர் என்ன காரணத்தாலோ, பார்த்திபனை சொல்லாமல் கொள்ளாமல் கழட்டிவிட்டு அமீரை ஹீரோவாக்கினார் பாரதிராஜா. மீண்டும் பார்த்திபனை நாடுவாரோ...
மறுபடியும் மொதல்லருந்தா... !


Click it and Unblock the Notifications











