Don't Miss!
- Finance 7.50 லட்சம் கோடி ரூபாயை நிதி திரட்டும் மத்திய அரசு.. எதற்காக தெரியுமா..?
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கஞ்சா கருப்பு விழா... நிற்க இடமின்றி ஓரத்தில் நின்ற அமீர்!
ஆனால் நேற்று நடந்த கஞ்சா கருப்புவின் சொந்தப் படமான வேல்முருகன் போர்வெல்ஸ் இசை வெளியீட்டு விழாவில் நிற்பதற்கு இடமின்ற ஓரத்தில் நின்றார் இயக்குநர் அமீர்.
கஞ்சா கருப்பு ஹீரோவாக நடித்து தயாரிக்கும் புதிய படம் வேல்முருகன் போர்வெல்ஸ். அவருக்கு ஜோடியாக ரகசியா நடித்துள்ளார்.
பாலா படத்தில் கருப்பு என்ற கதாபாத்திரத்தில் கஞ்சா விற்பவராக அறிமுகமாகியதால் கஞ்சா கருப்பு என்ற பெயர் அவருக்கு நிரந்தரமாகிவிட்டது. அமீரின் ராம் படத்தின் மூலம் பெரிய காமெடியனாகிவிட்டார் கருப்பு.
பருத்திவீரன், சுப்ரமணியபுரம், சண்டகோழி என அடுத்தடுத்து வரிசையாக நடித்த படங்களின் வெற்றியில் கருப்புக்கும் கணிசமான பங்குண்டு.
கஞ்சா கருப்புவின் வேல்குமரன் போர்வெல்ஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அமீர் பேசுகையில், "ராம் படத்தின் தியேட்டர் விசிட்டிற்கு சென்றிருந்த போது நான் உள்ளே போனதும், தியேட்டர் ஊழியர்கள் கஞ்சா கருப்புவை உள்ளே விடவில்லை. இவர் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்று கூறியபின்தான் உள்ளேவிட்டார்கள்.
ஆனால் அதே கஞ்சா கருப்புவை படத்தின் இடைவேளையில் ரசிகர்கள் தோள் மீது தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அதைப்பார்த்து சந்தோஷப்பட்டதை விட நான் இப்போது தான் அதிகம் சந்தோஷப்படுகிறேன்.
இன்று நான் தாமதமாக வந்ததால் உட்கார இடமில்லாமல் கதவோரமாக நின்றுவிட்டேன். தமிழ்த் திரையுலகமே கொண்டாடும் விஜய் சேதுபதி எனக்கு பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார்.
இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர் முருகதாஸ் உள்ளே அமர்ந்திருந்தார். சினிமாவில் கஞ்சா கருப்பு வளர்ந்திருக்கிறார், வெற்றியடைந்திருக்கிறார் என்பதற்கு இதைவிட பெரிய எடுத்துக்காட்டு வேறு எதுவும் கிடையாது. சந்தோஷமாக உள்ளது," என்றார்.