Don't Miss!
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- News தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு 69.46%.. தருமபுரியில் தான் அதிகம்.. மத்திய சென்னையில் மோசம்! முழு தகவல்!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
9 ஆண்டுகளுக்கு பிறகு டைரக்ஷனில் அமீரின் ரீ என்ட்ரி... டைட்டில் என்ன தெரியுமா ?
சென்னை : டைரக்டர் அமீர் 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படம் இயக்க போகிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபஸ்ட்லுக் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் பற்றிய அறிவிப்பு பலரையும் ஆச்சரியப்பட வைத்து ஆர்வத்தை தூண்டி உள்ளது.
தமிழ் சினிமாவில் டைரக்டர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் டைரக்டர் அமீர். சூர்யா நடித்த மெளனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு டைரக்டராக அறிமுகமானவர் அமீர். சூர்யாவை புதிய கோணத்தில் காட்டி, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் அமீர். அதற்கு பிறகு ராம், பருத்திவீரன் என இவர் இயக்கிய இரண்டு படங்களுமே செம ஹிட் ஆகின.
கடைசியாக 2013 ல் ஆதிபகவான் படத்தை இயக்கினார் அமீர். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. டைரக்டர், தயாரிப்பாளர் என்பதை தாண்டி யோகி படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார் அமீர். கடைசியாக 2018 ல் வடசென்னை படத்தில் நடித்திருந்தார் அமீர். கடந்த சில ஆண்டுகளாக சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த அமீர், சூர்யாவின் வாடிவாசல் உள்ளிட்ட 3 படங்களை தயாரித்து வருகிறார். வாடிவாசல் படத்திற்கு இவர் தான் திரைக்கதை எழுதி உள்ளார்.
என்ன தான் சீரியனாலும் நியாய தர்மம் வேண்டாமா... கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
இந்நிலையில் கிட்டதட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படம் இயக்கவும் முடிவு செய்துள்ளார் அமீர். சூரி நடிக்கும் படத்தை தயாரிக்க முடிவு செய்திருந்த அமீர், அந்த படத்தை தானே டைரக்ட் செய்யவும் முடிவு செய்துள்ளார். இந்த படத்திற்கு இறைவன் மிக பெரியவன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு வெற்றிமாறன் மற்றும் தங்கம் ஆகியோர் கதை எழுதுகிறார்கள். யுவன்சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். சூரி, சத்யா ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது.
கடற்கரையில் ஜாலியாக இருவர் நடந்து வருவது போல் போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது இது நட்பை அடிப்படையாகக் கொண்ட கதையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது நகரத்தில் நடப்பது போன்ற கதையாம். விரைவில் இந்த படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளது. அமீர் இயக்கும் ஐந்தாவது படம் இதுவாகும்.