Don't Miss!
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- News ஓயாத மணிப்பூர் கலவரம்.. பூத்களை கைப்பற்ற முயற்சி? மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
ஸ்பெஷல் நாள் என்று தெரியாமலேயே நேற்று சந்தனதேவன் படத்தைத் தொடங்கிய அமீர்!
தமிழ் சினிமாவில் பல அதிர்வுகளை ஏற்படுத்திய படம் பருத்தி வீரன். இந்த படத்தில் தான் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார். ப்ரியாமணிக்கும் தேசிய விருது கிடைத்தது.
அமெரிக்காவில் படித்து முடித்து ஹேண்ட்சம் பாயாக இருந்த கார்த்தியை பருத்தி வீரனாகவே வாழ வைத்திருப்பார் அமீர். இந்த படம் ரிலீஸாகி நேற்றோடு சரியாக பத்தாண்டுகள் முடிந்தது. பருத்தி வீரனின் பத்தாண்டுகள் என்று ஹேஷ்டேக் வைத்து ட்விட்டரில் ட்ரெண்டாக்கினார்கள் வலைதளவாசிகள்.
கார்த்தி தனது பத்தாண்டு சினிமா வாழ்க்கைக்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்து கடிதம் வெளியிட்டார். சரி... படத்தின் இயக்குநர் அமீர் என்ன செய்துகொண்டிருந்தார் தெரியுமா? ஆர்யா, சத்யா, அதிதி நடிப்பில் தான் இயக்கும் சந்தனத்தேவன் படத்தின் படப்பிடிப்பை நேற்று தான் துவக்கினார். மதுரை அருகே வெள்ளரிக்காடு என்ற கிராமத்தில் படப்பிடிப்பைத் துவக்கிய அமீருக்கு மதியம் வரையிலும் பருத்தி வீரனின் பத்தாண்டுகள் நினைவுக்கு வரவில்லை.
படப்பிடிப்புத் தளத்துக்கு சென்றிருந்த ஒரு நிருபர் வாழ்த்து சொன்னபோது தான் நினைவுக்கு வந்து ஆச்சர்யமாகி இருக்கிறார். ஒரு ஸ்பெஷல் நாளில் படப்பிடிப்பு தொடங்கியதில் படக்குழுவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறது. ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் இதுவரை பார்க்காத கெட்டப்களில் நடிக்கிறார்கள் ஆர்யா, சத்யா மற்றும் அமீர் மூவரும்.