Don't Miss!
- News வல்லவர்களை..நல்லவர்களை..! இன்றைக்கு ரொம்ப முக்கியம்.. எடப்பாடி பழனிசாமி வைத்த முக்கிய கோரிக்கை..!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அதிரடி அரசியலில் அமீர், வேற லெவல் பாலிட்டிக்ஸில் விஜய்சேதுபதி.. ஒரே நேரத்தில் 2 அரசியல் படங்கள்!
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் 2 அரசியல் படங்கள் தயாராகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர்.
Recommended Video
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அரசியல் நையாண்டி படங்கள் அதிகமாக வெளியாயின. சிரியசான அரசியல் படங்களும் வெளியாகி வந்தன.
அடுத்தடுத்து வந்த இயக்குனர்கள், காதல், காமெடி, பேய்ப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால், அரசியல் படங்கள் அதிகமாக வெளிவரவில்லை.
ஆள விடுங்கடா சாமி... என் பிறந்த நாள் அடுத்த மாசம்..கடுப்பான பிரபல நடிகை !
அரசியல் படங்கள்
இந்நிலையில் இப்போது ஒரே நேரத்தில் 2 அரசியல் படங்கள் தமிழ் சினிமாவில் உருவாகி வருகின்றன. அதில் ஒன்று நாற்காலி. அமீர் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். மெளனம் பேசியதே படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அமீர், அடுத்து, ராம், கார்த்தி அறிமுகமான பருத்தி வீரன், ஜெயம் ரவி நடித்த அதி பகவன் உட்பட சில படங்களை இயக்கினார்.
அரசியல்வாதி அமீர்
பின்னர் சுப்ரமணிய சிவா இயக்கிய, யோகி படத்தில் ஹீரோவாக நடித்தார். அடுத்து, சில படங்களில் நடித்த அமீர், கடைசியாக வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அவர் நாற்காலி படத்தில் நடிக்கிறார். அமைதிப்படை படத்துக்குப் பிறகு உருவாகும் முழுமையான அரசியல் படம். பக்காவான அரசியல்வாதியாக அமீர் நடிக்கிறார்.
வித்யாசாகர் இசை
படத்தை வி.இஸட்.துரை இயக்குகிறார். இவர், அஜித்தின் முகவரி, விக்ரமின் காதல் சடுகுடு, ஷாம் நடித்த 6 மெழுகு வர்த்திகள், சுந்தர்.சி நடித்த இருட்டு உட்பட சில படங்களை இயக்கியவர். அஜயன் பாலா வசனம் எழுதுகிறார். இதை, மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிக்கிறார். வித்யாசாகர் இசை அமைக்கிறார்.
துக்ளக் தர்பார்
இந்நிலையில், விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் படமும் அரசியலை மையப்படுத்திய கதையை கொண்டது. அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கும் இந்தப் படத்தில் பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன் உட்பட பலர் நடித்து வருகின்றனர். ஷூட்டிங் 50 சதவிகிதம் முடிந்துள்ளது. இதுவும் பக்காவான அரசியல் படம்தானாம்.
மாஸ்டர் இணை தயாரிப்பாளர்
நானும் ரவுடிதான் படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி, பார்த்திபன் கூட்டணி இதில் இணைந்துள்ளதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். இதை 'மாஸ்டர்' படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து வருகிறார். ஒரே நேரத்தில் 2 அரசியல் படங்கள் உருவாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!