அமிதாப் பச்சனை கசாபோடு ஒப்பிட்ட கவிஞர்

உருது கவிஞரான நிதா பாசில் (74) அண்மையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கோபக்கார இளைஞர் என்ற பட்டம் அமிதாபி பச்சனுக்கு ஏன் அளிக்கப்பட்டது? அவர் அஜ்மல் கசாப் போன்று ஒரு பொம்மை. ஒரு பொம்மையை சலீம்-ஜாவீதும், இன்னொரு பொம்மையை ஹபீஸ் சயீதும் உருவாக்கினர். பொம்மை தூக்கிலிடப்பட்டுவிட்டது. ஆனால் அதை உருவாக்கியவர் சுதந்திரமாக உள்ளார் என்றார்.
இந்த கருத்தை தெரிவித்த அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில்.
நான் அமிதாபை தீவிரவாதி என்று கூறவேயில்லை. சர்ச்சையை கிளப்ப மீடியா தான் என் கருத்தை திரித்துவிட்டது. நான் அமிதாபை பற்றி பேசவில்லை. கோபக்கார இளைஞர் இமேஜைப் பற்றி தான் பேசினேன். அவர் திறமையான கலைஞர். அது ஏன் அமிதாபை மட்டும் கோபக்கார இளைஞர் என்கிறோம்? 74 வயதாகும் அன்னா ஹசாரேவை மறந்துவிட்டோமா? என்றார்.


Click it and Unblock the Notifications











