Don't Miss!
- News பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தொடர்ந்த வழக்கில் ஹைகோர்ட் கேள்வி
- Automobiles சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கைதட்டுனா கொரோனா வைரஸ் செத்துடுமா.. என்ன அமிதாப் சார் இதெல்லாம்.. நீக்கப்பட்ட அமாவாசை ட்வீட்!
மும்பை: கொரோனா வைரஸ் குறித்த சர்ச்சையான ட்வீட்டை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நீக்கியுள்ளார்.
மார்ச் 22ம் தேதி மாலை 5 மணிக்கு, அனைவரும் வீட்டுக்கு வெளியே வந்து ஒலி எழுப்பினால், வைரஸ் உள்ளிட்ட தீய சக்திகள் அழிந்துவிடும் என்றும்,
அமாவாசை நாளில் கெட்ட சக்திகள், வைரஸ் உள்ளிட்டவற்றின் வீரியம் அதிகரிக்கும், அதற்கு எதிராகத்தான் தான் அனைவரும் கைதட்டுதல், ஒலி எழுப்புதல் போன்றவற்றை செய்து வைரஸை விரட்ட வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார். அப்படி கைதட்டுவதன் மூலம், ரத்த ஓட்டமும் சீராகி உடலுக்கு உறுதியை கொடுக்கும் என்று தனது ட்வீட்டில் அமிதாப் பச்சன் பதிவிட்டு இருந்தார்.
அமிதாப் பச்சனின் இந்த மூட நம்பிக்கையான ட்வீட்டை பார்த்த பலரும் தொடர்ந்து விமர்சனம் செய்ய, அமிதாப் பச்சன் அந்த ட்வீட்டை நீக்கி உள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை பிரதமர் நரேந்திர மோடி, கேட்டுக் கொண்டதன் பேரில் நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு பின்பற்றப்பட்டுள்ளது. மேலும், மாலை 5 மணிக்கு, கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களை பாராட்டி கரவொலிகளை எழுப்புமாறும் கேட்டுக் கொண்டார்.
ஆனால், இந்த கைதட்டல் விஷயம், மூட நம்பிக்கையுடன் கைகோர்த்துக் கொண்டு வாட்ஸப் வதந்தியாக பரவியது.
இந்தியாவின் மிகப்பெரிய நடிகரான அமிதாப் பச்சன், அந்த விஷயத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது சர்ச்சையை கிளப்பியது.
முன்னதாக, ரஜினிகாந்த், பவன் கல்யாண், 14 மணி நேரம் வீட்டில் அடைந்து கிடந்தால், கொரோனா வைரஸ் வீரியம் குறைந்துவிடும் என போட்ட ட்வீட்களை ட்விட்டர் இந்தியா டெலிட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரபலங்கள் மூலம் விழிப்புணர்வு கொடுத்தால், சீக்கிரம் பரவும் என்பதால், இது போன்ற சென்சிட்டிவ்வான விஷயங்களை பகிரும் போது, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது மிக மிக அவசியம்.