Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கொரோனாவிலே நீங்க போயிடணும்.. எல்லை மீறிய நெட்டிசன்.. கடுப்பான அமிதாப் பச்சன்.. வச்சு விளாசல்!
மும்பை: ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆரத்யாவுக்கு கொரோனா தொற்று குணமான நிலையில், நடிகர் அமிதாப் பச்சன் கொரோனா நோயால் இறந்து விட வேண்டும் என எல்லை மீறிய நெட்டிசனுக்கு அமிதாப் பச்சன் பதிலடி கொடுத்துள்ளார்.
77வயதாகும் நடிகர் அமிதாப் பச்சன், இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக இருந்து வருகிறார்.
இந்த வயதிலும், பல படங்களில் லீடு ரோலில் தரமான நடிப்பை கொடுத்து வருகிறார்.
வயது முதிர்வு காரணமாக.. பிரபல முன்னாள் ஹீரோயின் காலமானார்.. திரையுலகம் இரங்கல்!
குடும்பத்துக்கே கொரோனா
அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா என ஜெயா பச்சனை தவிர்த்து ஒட்டுமொத்த குடும்பத்துக்கே கொரோனா பாதிப்பு அண்மையில் ஏற்பட்டது. மும்பை நானாவதி மருத்துவமனையில் முன்னதாக அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
3 வாரங்கள்
அவர்களை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆரத்யாவும் கொரோனா சிகிச்சைக்காக அதே நானாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று இருவருக்கும் கொரோனா நெகட்டிவ் என பரிசோதனையில் வந்ததை தொடர்ந்து இருவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் கிட்டத்தட்ட 3 வார காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொய் செய்தி
சமீபத்தில், நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா நோய் குணமாகி விட்டது என ஆங்கில மீடியா ஒன்று வெளியிட்ட செய்தியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், தனது உடல் நிலை குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அமிதாப் பச்சன் ட்வீட் செய்திருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும், சமூக வலைதளங்களில் அமிதாப் ஆக்டிவாக இருக்கிறார்.
கொரோனாவிலே போயிடணும்
இந்நிலையில், விஷமம் பிடித்த சில நெட்டிசன்கள், நடிகர் அமிதாப் பச்சன் கொரோனா வைரஸ் பாதித்துள்ள நிலையில், அப்படியே இறந்து விட வேண்டும் என எல்லை மீறி கீழ்த் தரமான பதிவுகளை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். அந்த நெட்டிசன்களை பல அமிதாப் பச்சன் ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர்.
அமிதாப் பதிலடி
இந்நிலையில், நடிகர் அமிதாப் பச்சன், "மிஸ்டர் அடையாளம் தெரியாதவரே, உன்னால் உன் அப்பன் பெயரையும் எழுத முடியாது. ஏனென்றால், உனக்கு உன் அப்பன் யாரென்றே தெரியாது." என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். மேலும், விரைவில் வீடு திரும்பிடுவீங்க தாத்தா என ஆராத்யா கூறியது தனக்கு கண்ணீரையே வரவழைத்து விட்டது என்றும், ரசிகர்களின் பிரார்த்தனையால் குணமாகி திரும்புவேன் என்றும் கூறியுள்ளார்.