Don't Miss!
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- News ஓயாத மணிப்பூர் கலவரம்.. பூத்களை கைப்பற்ற முயற்சி? மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
அமிதாப் பச்சனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
கல்லீரல் பாதிப்பால் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கடந்த மூன்று நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது.
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அமிதாப் பச்சன். 77 வயதிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 1982ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு விபத்தின்போது 'ஹெப்பாடிட்டீஸ் பி' வைரஸ் பாதிப்புடன் இருந்த ஒருவரின் ரத்தம் அமிதாபுக்கு தவறுதலாக ஏற்றப்பட்டது. இதனால் அவரது கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 75 சதவீதத்துக்கு மேல் அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டுவிட்டது.
இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமிதாபின் உடல்நிலையில் திடீர் பிரச்சினை ஏற்பட்டது. நள்ளிரவு 2 மணியளவில் அவர் மும்பை சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பண்டிகை தினத்திற்கு முன்னாடியே ரிலீஸ்.. காரணம் அந்த பயம் தானாம்!
அங்கு ஐசியூவுக்கு இணையான தனி அறையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் 24 மணி நேரமும் அமிதாபை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அவரை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.
உடல்நலக்குறைவால் அமிதாப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செய்தி, அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமிதாபுக்காக பலரும் பிராத்தனை செய்து வருகிறார்கள்.