Just In
- 3 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 3 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 5 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 6 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Automobiles
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மாமா அமிதாப் பச்சன் ஆசியுடன் அரசியலுக்கு வந்துள்ளாரா பிரியங்கா காந்தி?
டெல்லி: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆசியுடன் தான் பிரியங்கா காந்தி அரசியலில் குதித்துள்ளதாக கூறப்படுகிறது.
கிழக்கு உத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு அவர் டெல்லியில் மாமுன்(தாய் மாமன்) அமிதாப் பச்சனை சந்தித்து பேசியுள்ளார். பிரியங்கா அரசியலுக்கு வருவது அமிதாபுக்கு முன்பே தெரியும்.

பிரியங்கா சிறு வயதில் இருந்தே அமிதாபை மாமுன் என்று தான் அழைப்பார். காந்தி-பச்சன் குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு தீர்ந்து தற்போது மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
18 ஆண்டுகளுக்கும் மேலாக காந்தி-பச்சன் குடும்பங்களுக்கு இடையே பிரச்சனையாக இருந்தது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த இரண்டு குடும்பங்களும் ஒன்று சேர்ந்துள்ளன. காந்தி-பச்சன் குடும்பங்கள் இடையேயான பிரச்சனை குறித்து 2000ம் ஆண்டு தான் வெளியே வந்தது. தனிப்பட்ட சோகங்கள், பர்சனாலிட்டி பிரச்சனை உள்ளிட்டவற்றால் இரு குடும்பங்களும் பிரிந்தன.
பாலிவுட்டின் அதிகாரம் படைத்த குடும்பமான பச்சன்களால் ராகுல், பிரியங்கா மற்றும் சோனியா காந்திக்கு ஆதரவு பெருகும் என்று நம்பப்படுகிறது.
43 ஆண்டுகளுக்கு முன்பு எமர்ஜென்சி காலத்தில் சஞ்சய் காந்திக்கு ஆதரவாக இருந்ததால் அமிதாப் பச்சன் கடும் விமர்சனத்திற்குள்ளானார். போபர்ஸ் ஊழல் பிரச்சனை பெரிதானபோது அப்பொழுது அலகாபாத் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த அமிதாப் அரசியலை விட்டு விலகினார். போபர்ஸ் ஊழலுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்பதை நிரூபித்தார்.
இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் மீண்டும் போட்டியிட விரும்புகிறாராம் அமிதாப். குஜராத் சுற்றுலாத் துறை பிராண்டு அம்பாசிராக நியமிக்கப்பட்ட அமிதாப் மோடியிடம் இருந்து தள்ளியிருக்க விரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.