Don't Miss!
- News ரேஷனில் குஷி.. ரேஷன் கார்டுதாரர்களுக்கு மகிழ்ச்சி..இலவச ரேஷன் திட்டத்தில் புது அதிரடி.. இதுதான் மோடி
- Finance 20000 ரூபாய்க்கு கீழ் பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் - பட்ஜெட் ஷாப்பிங்
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
'சய்ரத்' இயக்குநரின் அடுத்த படத்தில் அமிதாப் பச்சன்!
மும்பை : 'ஃபாண்ட்ரி', 'சய்ரத்' ஆகிய படங்களை இயக்கிய நாகராஜ் மஞ்சுலே பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். நாகராஜ் மஞ்சுலே இயக்கிய முந்தைய மராத்தி படங்கள் இரண்டும் விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றவை.
அடுத்த படத்தையும் மராத்தியில் எடுக்க நினைத்தவர், இப்போது இந்தியிலேயே எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார். இதற்காக கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக ஸ்க்ரிப்ட் வேலைகளில் இருக்கிறாராம். அவர் இயக்க இருக்கும் பாலிவுட் படமும் 'சய்ரத்' போல சமூகக் கருத்துகளைச் சொல்லக்கூடியதாக இருக்குமாம்.
தனது பாலிவுட் படத்திற்கான வேலைகளில் இறங்கியிருக்கும் நாகராஜ் மஞ்சுலே இந்தப் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்க நடிகர் அமிதாப் பச்சனை அணுகியிருக்கிறார். வயதான தோற்றத்தில் அமிதாப் பச்சன் திரையில் வருவார். மிகவிரைவில், படத்தின் ஷூட்டிங் தொடங்கலாம் எனக் கூறப்படுகிறது. 'சய்ரத்' படத்தைப் பார்த்துவிட்டு அமிதாப் பச்சன் மஞ்சுலேவைப் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.