Don't Miss!
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- News ஓயாத மணிப்பூர் கலவரம்.. பூத்களை கைப்பற்ற முயற்சி? மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
'சய்ரத்' இயக்குநரின் அடுத்த படத்தில் அமிதாப் பச்சன்!
மும்பை : 'ஃபாண்ட்ரி', 'சய்ரத்' ஆகிய படங்களை இயக்கிய நாகராஜ் மஞ்சுலே பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். நாகராஜ் மஞ்சுலே இயக்கிய முந்தைய மராத்தி படங்கள் இரண்டும் விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றவை.
அடுத்த படத்தையும் மராத்தியில் எடுக்க நினைத்தவர், இப்போது இந்தியிலேயே எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார். இதற்காக கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக ஸ்க்ரிப்ட் வேலைகளில் இருக்கிறாராம். அவர் இயக்க இருக்கும் பாலிவுட் படமும் 'சய்ரத்' போல சமூகக் கருத்துகளைச் சொல்லக்கூடியதாக இருக்குமாம்.
தனது பாலிவுட் படத்திற்கான வேலைகளில் இறங்கியிருக்கும் நாகராஜ் மஞ்சுலே இந்தப் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்க நடிகர் அமிதாப் பச்சனை அணுகியிருக்கிறார். வயதான தோற்றத்தில் அமிதாப் பச்சன் திரையில் வருவார். மிகவிரைவில், படத்தின் ஷூட்டிங் தொடங்கலாம் எனக் கூறப்படுகிறது. 'சய்ரத்' படத்தைப் பார்த்துவிட்டு அமிதாப் பச்சன் மஞ்சுலேவைப் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.