Don't Miss!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- News சூரத் தொகுதியில் பாஜக வெற்றி.. அப்பட்டமான சதி! அம்பலப்பத்திய பத்திரிகையாளர் ஷாம்!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்திய சினிமா வரலாற்றை ரஜினியின் கோச்சடையானுக்கு முன் - பின் என்றே எழுத வேண்டும்! - அமிதாப்
மும்பை: இந்திய சினிமா வரலாற்றை எழுதுவோர் இனி கோச்சடையானுக்கு முன், கோச்சடையானுக்குப் பின் என்றே எழுத வேண்டும். அத்தனை சிறப்பு வாய்ந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படம் இது, என பாலிவுட் சாதனையாளர் அமிதாப் பச்சன் கூறினார்
'கோச்சடையான்' படத்தின் இந்தி முன்னோட்டக் காட்சி மற்றும் இசை வெளியீட்டு விழா மும்பையில் ஞாயிற்றுக் கிழமை நடந்தது.
பாலிவுட் பிரபலங்கள் பலரும் பங்கேற்ற இந்த விழாவில் ட்ரைலர் - பாடல்களை வெளியிட்டுப் பேசினார் அமிதாப் பச்சன்.
அவரது பேச்சு முழுமையாக:
இதை எப்படி வார்த்தைகளில் வர்ணிப்பதென்று தெரியவில்லை. ஆனால் இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ஒரு பெண் என்று சொல்ல விரும்புகிறேன். செளந்தர்யா ஒரு படி முன்னே வந்து, இந்திய பெண்களால் சாதிக்க முடியாததே இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார்.
ஒரு மகளாக, தன் பாசமிக்க அப்பாவுக்கு மிகவும் பெருமை சேர்த்துள்ளார். ஒரு அப்பாவாக தன் மகளின் நம்பிக்கைக்கு ஆதரவாக இருந்து மிகப் பெரும் சாதனை நிகழ காரணமாக இருந்திருக்கிறார் ரஜினி.
நானும் ரஜினியும் மிக நெருக்கமானவர்கள். ஒரு குடும்பம் போல பழகியிருக்கிறோம். பல படங்களில் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். அவர் மிக எளிமையான மனிதர். திரைக்குப் பின்னால் நேரமிருக்கும்போதெல்லாம் எங்களுடைய சந்திப்பில் சினிமா, குடும்பம், வாழ்க்கையைப் பற்றி நிறைய பேசுவோம்.
'எந்திரன்' தயாரிப்பின்போது இந்த வாழ்க்கை தனக்கு மிகவும் போரடிப்பதாகச் சொன்னார் ரஜினி. ஆனால் நான் ரஜினியிடம் சொன்னேன், படங்களில் நடிப்பதை நிறுத்தி விடாதீர்கள் என்று.
இப்போது பாருங்கள்.. என்ன மாதிரியான ஒரு படத்தை உருவாக்கியிருக்கிறாரென்று? தன்னை மீண்டும் அவர் கண்டெடுத்த விதம் நம்ப முடியாதது! சினிமா ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரவிருக்கிறார் ரஜினி.
இந்திய சினிமாவின் வரலாற்றை எழுதுபவர்கள் நிச்சயமாக கோச்சடையானுக்கு முன்பும், பின்பும் என்றுதான் எழுத முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
ரஜினியின் ரசிகர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் நீங்கள் தென் இந்தியாவுக்குப் போக வேண்டும்.
ரஜினியின் படங்களின் முதல் நாள், முதல் ஷோவின் டிக்கெட்டுகளை உங்களால் வாங்கவே முடியாது. அது முழுக்க முழுக்க அவரது ரசிகர்களிடத்தில்தான் இருக்கும். அப்படியே டிக்கெட்டுகளை நீங்கள் வாங்கி தியேட்டருக்குள் நுழைந்தாலும் அங்கே உங்களால் எதையும் கேட்கவே முடியாது. அந்த அளவுக்கு கைதட்டல்களும், விசில்களும் பறக்கும்.
'கோச்சடையான்' பல ஆண்டுகள் தியேட்டர்களை ஆளும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது," என்றார்.