Don't Miss!
- News ஹலோ எங்க வீட்ல மொத்தம் 5 ஓட்டு.. சார் நான் ஈபி ரீடிங் எடுக்க வந்திருக்கேன்!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நிஜ போராளிகள்.. இந்த சுதந்திர தினத்தை சுகாதார ஊழியர்களுக்கு சமர்பிப்போம்.. அமிதாப் பச்சன் உருக்கம்!
மும்பை: நாடு முழுவதும் 74வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது.
1947ம் ஆண்டு ஆங்கிலேயர்களை வெளியேற்றி சுதந்திர போராட்ட தியாகிகள் பெற்றுத் தந்த சுதந்திர திருநாட்டில் நாம் இன்றும் சுவாசித்து வருகிறோம்.
மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் போல தற்போது கொரோனா வைரஸிடம் இருந்து நம்மை காத்து வரும் சுகாதார ஊழியர்களை இந்த நாளில் நினைத்து போற்ற வேண்டும் என அமிதாப் பச்சன் உருக்கமான போஸ்ட் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
லாக்டவுன் விழா.. சொந்தங்கள் முன்னிலையில்.. பெரிய குடும்பத்து ஹீரோயினுக்கு திடீர் நிச்சயதார்த்தம்!
74வது சுதந்திர தினம்
வியாபாரம் எனும் பெயரில் நம் நாட்டிற்குள் கடல் வழியாக நுழைந்து, கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கும் மேல் நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களை எத்தனையோ வீர புருஷர்கள், தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து, விரட்டி அடிக்கப் பார்த்தனர். பின்னர், இம்சையை அகிம்சையால் விரட்டலாம் என்ற காந்தியின் வழியை பின்பற்றிய பல லட்சம் சுதந்திர போராட்ட தியாகிகளால் நம் மீது சுமத்தப்பட்ட அடிமைகள் என்ற அவச்சொல் நீங்கியது.
ஒத்துழையாமை இயக்கம்போல
74வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட முடியாத சூழலில் நம்மை கொரோனா எனும் கொடிய வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. அனைவரும் ஒத்துழையாமை இயக்கம் போல, சமூக விலகலை கடை பிடிப்பது ஒன்றே இந்த நோயை விரட்ட ஒரே தீர்வு, அரசும் மருத்துவர்களும் கூறும் அறிவுரை பின்பற்றி விரைவில் கொரோனாவில் இருந்து இந்திய திருநாட்டை மீட்க வேண்டும் என்கிற முயற்சியில் ஒவ்வொரு குடிமகனும் ஈடுபட வேண்டும்.
நிஜ போராளிகள்
இந்த கடினமான காலக்கட்டத்தில், எத்தனையோ மருத்துவர்கள், செவிலியர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றி வருகின்றனர். அவர்களை இந்த நல்ல நாளில் நினைத்து போற்ற வேண்டும், அவர்கள் தான் தற்போதைய சூழலில் நிஜ போராளிகள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ராயல் சல்யூட் என அமிதாப் பச்சன் உருக்கமான போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இரும்பு மனிதர்
77 வயதிலும் கொரோனா வைரஸிடம் இருந்து கடுமையான போராட்டத்திற்கு பிறகு நடிகர் அமிதாப் பச்சன் போராடி சமீபத்தில் மீண்டுள்ளார். அவரது மன வலிமையை பல பாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். தொடர்ந்து ரசிகர்கள் உடன் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார் அமிதாப் பச்சன்.
Recommended Video
வரிசையாக
தமிழில் எஸ்.ஜே. சூர்யாவுடன் இணைந்து நடித்த உயர்ந்த மனிதன் படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. பாலிவுட்டில் ஆலியா பட், ரன்பீர் கபூர் நடிப்பில் அமிதாப் பச்சன் நடித்துள்ள பிரம்மாஸ்த்ரா படமும், நாகராஜ் மஞ்சுலே மற்றும் ரூமி ஜாஃப்ரே இயக்கத்தில் உருவாகியுள்ள ஜூந்த் படங்களும் ரிலீசுக்காக வெயிட்டிங்.