Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகைகளை தொடர்ந்து பகீர் தகவல் வெளியிட்ட அமிதாப் பச்சன்: தவறான ரத்தத்தால் 75% கல்லீரல் பாதிப்பு!
மும்பை: தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் 75 சதவீத கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகர் அமிதாப் பச்சன் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகைகள் பலரும் புற்றுநோய், மன அழுத்தம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடிகை மனீஷா கொய்ராலா, சோனாலி பிந்த்ரே ஆகியோர் அமெரிக்காவில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர்.
நடிகை ஆண்ட்ரியா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு பல மாதங்கள் ஆயுர்வேத சிகிச்சை பெற்றதாக கூறினார். இந்நிலையில் நடிகை பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன், தானும் தீவிர மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதற்காக தீவிர சிகிச்சை மேற்கொண்டதாகவும் கூறினார்.
வனிதா இருக்காரே.. சரியான வாத்து.. சைக்கிள் கேப்பில் போட்டுத்தாக்கிய கஸ்தூரி!
தவறான ரத்தம்
நடிகைகள் தொடர்ந்து மன அழுத்தத்திற்கு ஆளாவதாக கூறுவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் தனக்கு தவறான ரத்தம் செலுத்தப்பட்டதாக கூறி குண்டை தூக்கி போட்டுள்ளார்.
காசநோய் பாதிப்பு
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அமிதாப், தனது உடல் நிலை குறித்த பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறினார். தான் காசநோய் பாதிப்பில் இருந்து தப்பியிருப்பதாகவும் கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.
கல்லீரல் பாதிப்பு
மஞ்சள்காமாலையில் இருந்து மீண்டிருப்பதாகவும் கூறினார் அவர்.
அதுமட்டுமின்றி தனது உடம்பில் தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் 75 சதவீத கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 25 சதவீதம் மட்டுமே கல்லீரல் வேலை செய்வதாகவும் கூறி அதிர வைத்துள்ளார்.
8 வருடங்கள்
தான் பாதிக்கப்பட்டதால்தான் மற்றவர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாகவும் கூறினார் அமிதாப் பச்சன். தான் காச நோயால் பாதிக்கப்பட்டிருந்தது 8 வருடங்களுக்கு பிறகே தனக்கு தெரியவந்தது என்றும் அவர் கூறினார்.
ரசிகர்கள் அதிர்ச்சி
மக்கள் அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். அமிதாப் பச்சனுக்கு தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் அவரது கல்லீரல் 75 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய தகவலை கேட்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.