சிங்கிள் கவிதைக்கு 1 கோடியா
மும்பை: அமிதாப் சார் எனக்கு ஒரு 1 கோடி ரூபாய கொடுத்திட்டு நீங்க என்ன வேணாலும் பண்ணுங்க இப்படி ஸ்டிரைட்டா அவர்ட்ட கேட்டா கொடுப்பாரா ஆனா வேறு வழியில்ல இப்போ கொடுத்து தான் ஆகணும் எனக்கு இல்லைங்க அமிதாப் மேல கேஸ் ஒன்னு போட்டு நஷ்ட ஈடு கேட்டவருக்கு, என்னது அமிதாப் மேல கேசான்னு மெர்சலாகாம மேல படிங்க அவரோட பேரு ஜக்பீர் ரதி டாக்டருன்னு சொல்றாங்க அதைப் பத்தி நமக்கெதுக்கு.

நான் பல தடவ அவரைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்து பலன் இல்லை எனவேதான் தற்போது வக்கீல் நோட்டிஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறேன்னு கேஸ் போட்டவாறு சொல்லி இருக்காரு , விஷயம் இதுதான் ஜக்பீர் ரதி ஒரு கவிதைய எழுதி அதை சமூக வலைத்தளத்தில (அதாவது இது நடந்தது 2006 வது வருசத்தில) அமிதாப்போட பேன்ஸ் ஒருத்தருக்கு போஸ்ட் பண்ணியிருக்காரு அவர் பேரு விகாஸ் துபே.
நம்ம அமிதாப் சார் சும்மா இல்லாம அந்த உலகப் புகழ் பெற்ற கவிதைய தன்னோட பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்துல போட்டு அந்தக் கவிதையால பேரும் புகழும் அடைஞ்சிட்டாருன்னு இந்த ஜக்பீர் ரதி கேஸ் ஒன்னு போட்டு இன்னும் 15 நாளைக்குள்ள எனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு தரணும்னு அவரோட கன்னத்தில அறைஞ்ச மாதிரி கேட்டு இருக்காரு இதுக்கு அமிதாப்போட ரியாக்சன் என்னன்னு தெரியல பாக்கலாம்.
நமக்கெதுக்குப்பா இந்த இந்த கவிஞர் ஆசையெல்லாம்...


Click it and Unblock the Notifications











