Don't Miss!
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- News ஓயாத மணிப்பூர் கலவரம்.. பூத்களை கைப்பற்ற முயற்சி? மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக.. நேரடி தமிழ்ப்படத்தில் நடிக்கும் அமிதாப்.. ஹீரோ எஸ்.ஜே.சூர்யா!
எஸ்.ஜே.சூர்யா படம் மூலம் நேரடி தமிழ்ப்படத்தில் நடிக்க இருக்கிறார் அமிதாப்.
Recommended Video
சென்னை: தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக நேரடி தமிழ்ப்படத்தில் நடிக்க இருக்கிறார் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்.
குஷி, வாலி உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் சமீபகாலமாக நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். மெர்சல் படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்த அவரது நடிப்பில் அடுத்ததாக நெஞ்சம் மறப்பதில்லை படம் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தை செல்வராகவன் இயக்கியிருப்பதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து விஜயுடன் 'சர்க்கார்', மற்றும் இறவாக்காலம் உள்ளிட்ட படங்களில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார்.
டிவிட்டர் அறிவிப்பு:
இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து தனது அடுத்தப்படம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக டிவிட்டரில் அறிவித்திருந்தார் எஸ்.ஜே.சூர்யா. அது என்னவாக இருக்கும் என அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.
நேரடி தமிழ்ப்படம்:
அதன்படி, செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.ஜே.சூர்யா, 'தான் அடுத்ததாக தமிழ்வாணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தில் முக்கிய வேடத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாகவும்' தெரிவித்துள்ளார்.
இந்தியில் அறிமுகம்:
இப்படம் தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் எடுக்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியிலும் நாயகனாக எஸ்.ஜே.சூர்யா அறிமுகமாக இருக்கிறார். டபுள் ஹீரோ சப்ஜெக்டில் இப்படம் உருவாக இருக்கிறது.
உயர்ந்த மனிதன்:
திருச்செந்தூர் முருகன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் பைவ் எலிமெண்ட்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு உயர்ந்த மனிதன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. பாலிவுட் சூப்பர்ஸ்டார் தமிழில் நேரடியாக அறிமுகம் ஆகும் படம் என்பதால் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்க இருக்கின்றனர்.
ரஜினி அறிவிப்பு:
இப்படம் பற்றிய அறிவிப்பை ரஜினி வீடியோ மூலம் அறிவித்தார். மார்ச் 2019 இல் இப்பட ஷூட்டிங் துவங்க உள்ளது. மற்ற நடிக, நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் தேர்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
வெற்றிக் கூட்டணி:
முன்னதாக எஸ்.ஜே.சூர்யாவும், தமிழ்வாணனும் இணைந்து பணியாற்றிய கள்வனின் காதலி படம் வணிகரீதியாக நல்ல வெற்றி பெற்றது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.