Don't Miss!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தனுஷும் அக்ஷராவும் நம்ப ஒழுக்கமான, கட்டுப்பாடு மிக்க நடிகர்கள் - அமிதாப்
தனுஷும் அக்ஷராவும் மிகவும் கட்டுப்பாடு மிக்க ஒழுக்கமான நடிகர்கள் என பாராட்டியுள்ளார் பாலிவுட்டின் சாதனை நடிகர் அமிதாப் பச்சன்.
பால்கி இயக்கும் புதிய படத்தில் அமிதாப் பச்சனுடன் தனுஷ், அக்ஷரா ஹாஸன் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நீலகிரியில் நடந்து வருகிறது.
தனுஷ் மற்றும் அக்ஷராவின் தொழில் நேர்த்தி குறித்து பெரிதும் சிலாகித்த அமிதாப் பச்சன், "இந்தப் படத்தில் தனுஷும் அக்ஷராவும் எனது சக நடிகர்கள். தென்னகத்துக்கே உரிய நேர்த்தியையும் ஒழுக்கத்தையும் அவர்களிடம் காண்கிறேன். மிகச் சிறந்த கலைஞர்கள்.
ஒவ்வொரு நாளும் அவர்கள் நடிப்பைப் பார்க்கப் பார்க்க அவர்களின் மீதான என் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது...
நீலகிரிக்கு பல முறை நான் ஷூட்டிங்குக்கு வந்துள்ளேன். ஒவ்வொரு முறையும் எனக்கு அலுக்காத லொகேஷன் இது...," என்றார்.