Don't Miss!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- News சித்ரா பவுர்ணமி 2024: சென்னை டூ திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்
- Finance டெஸ்லா-வை சீண்டும் சியோமி.. கடுப்பான எலான் மஸ்க்..!!
- Automobiles ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மனஉளைச்சல்.. ஒரு வருடம் ஓய்வெடுக்க அமிசாப்பச்சன் முடிவு
மும்பை: வருகிற மே மாதம் வரை தனக்கு இருக்கும் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சுமார் ஒரு வருட காலம் ஓய்வு எடுக்க முடிவு செய்திருக்கிறேன் என்று பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்திருக்கிறார்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தற்போது சத்யகிரஹா என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரகாஷ் ஜா இயக்கி வருகிறார். இதற்கான படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் நடைபெற்று வருகிறது. மேலும், ஜூலை 25ந் தேதி நடைபெறும் மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் அமிதாப் கலந்து கொள்கிறார். அவருக்கு இந்த விழாவில் சிறப்பு கவுரவம் அளிக்கப்படுகிறது.
கவுரவ அங்கீகாரம்:
இது குறித்து தனது பிளாக்கில் நடிகர் அமிதாப் பச்சன், 'மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் என்னுடைய கடந்த கால நிகழ்வுகளை கருத்தில் கொண்டு எனக்கு கவுரவம் அளிக்கப்பட இருக்கிறது. அந்த விழாவில் நான் கலந்து கொள்கிறேன்.
சத்யகிரஹா படம்:
அதன் பின்னர் போபாலில் நடைபெறும் சத்யகிரஹா திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். அதன் இறுதி கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் இறுதியில் முடிவடைகிறது.
பிரீமியர் ஷோ:
பின்பு உடனடியாக நியூயார்க் நகருக்கு பயணமாகிறேன். அங்கு மே முதல் தேதியில் வெளியிடப்படும் தி கிரேட் கேட்ஸ்பை திரைப்படத்தின் முதல் காட்சியில் (பிரீமியர் ஷோ) கலந்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஓய்வு:
அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்து கொண்டு ஒரு வருடம் ஓய்வில் இருக்க முடிவு செய்துள்ளேன்.
மன உளைச்சல்:
நான் எங்கிருக்கிறேன்? நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? நான் ஏன் இவ்வாறு இருக்கிறேன்? என்பன போன்ற கேள்விகள் தொடர்ந்து என்னுள் எழுந்து மனஉளைச்சலை ஏற்படுத்துவதால் இந்த ஓய்வு அவசியமாகிறது என்றும் அதில் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.