Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அம்மா இல்லை என்றால் இந்த தமிழகம் இல்லை...: ராதாரவி
சென்னை: தமிழகமே முதல்வர் அம்மாவை நம்பித்தான் இருக்கிறது. அவர்கள் இல்லை என்றால் தமிழகம் இல்லை. அம்மாதான் நிரந்தர முதல்வர் என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முதல்வருக்கு ஆதரவாகவும் தமிழ்திரை உலக நடிகர், நடிகையர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். கூட்டத்தில் முதல்வருக்கு ஆதரவாக கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
இறுதி தீர்ப்பு அல்ல
போராட்டத்தில் பங்கேற்றுள்ள நடிகர் ராதாரவி, நீதிபதியைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்த தீர்ப்பு இறுதி தீர்ப்பு அல்ல. உயர்நீதிமன்றம் இருக்கிறது அங்கு நிச்சயம் வெற்றி பெறுவார் என்றார்.
எப்படி இருக்கிறார்களோ?
தண்டனை அறிவித்த உடன் யாருக்கும் காட்டாமல் சிறைக்கு அனுப்பிவிட்டனர். அங்கே அம்மா எப்படி இருக்கிறார்களோ? என்ன நிலையில் இருக்கிறார்களோ தெரியவில்லை.
நிரந்தர முதல்வர்
மிகப்பெரிய ஊழல் செய்தவர்கள் எல்லோரும் இந்த தீர்ப்பை கேட்டு அமைதியாக இருக்கின்றனர். அம்மா இல்லை என்றால் தமிழகமே இல்லை. அவர்தான் நிரந்தரமுதல்வர் என்றார்.
கறுப்பு நாள்
தொடர்ந்து பேசிய நடிகர் மன்சூர் அலிகான், செப்டம்பர் 27ஆம் தேதி ஒரு கறுப்பு நாள் என்றார். அன்றைய தினம் தமிழக மக்களின் தலையில் இடி விழுந்துவிட்டது என்றும் மன்சூர் அலிகான் கூறினார்.