twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “நீ ஜெயிச்சப்பிறகுதான் போவேன் என்றார்”: ஆனால், அம்மாவை நினைத்து உருகிய நடிகர் உதயா

    |

    சென்னை: சமீபத்தில் காலமான தனது தாயார் வள்ளியம்மை குறித்து நடிகர் உதயா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    நடிகர் உதயா, இயக்குநர் விஜய் ஆகியோரின் தாயாரும், மூத்த தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் மனைவியுமான வள்ளியம்மை சில தினங்களுக்கு முன் காலமானார்.

    அம்மா குறித்து நடிகர் உதயா மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளது பலரையும் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.

    பிருத்விராஜ் படத்தில் இருந்து விலகினாரா மஞ்சுவாரியர்...இதுதான் காரணமா? பிருத்விராஜ் படத்தில் இருந்து விலகினாரா மஞ்சுவாரியர்...இதுதான் காரணமா?

    தமிழ் சினிமாவில் உதயா

    தமிழ் சினிமாவில் உதயா

    தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் மூத்த மகனும், இயக்குநர் விஜய்யின் அண்ணனுமாகிய உதயா, இனி எல்லாம் சுகமே, திருநெல்வேலி, கலகலப்பு, ஷக்கலக்க பேபி, தலைவா, மாநாடு உட்பட சில படங்களில் நடித்துள்ளார். நீண்ட காலங்களாக திரைத்துறையில் பயணித்தாலும், நடிகர் உதயாவின் திறமைக்கு ஏற்ற படங்கள் இன்னும் சரியாக அமையவில்லை. இந்நிலையில், அவரின் அம்மா வள்ளியம்மை, சில தினங்களுக்கு முன்னர் காலமானார். இதனால், அம்மாவை இழந்து பெரும் சோகத்தில் தத்தளித்து வரும் உதயா, தனது அம்மா குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    சினிமா ஆசையும் அம்மாவின் ஆசியும்

    சினிமா ஆசையும் அம்மாவின் ஆசியும்

    அதில், அம்மா என்றாலே தெய்வத்திற்கு சமமானவர் தான், ஆனால், எங்களுக்கு இன்னும் ஒருபடி மேல் எனக் குறிப்பிட்டுள்ளார். நான் உட்பட விஜய், தங்கை மூவரையும் ஒரேமாதிரி தான் நடத்துவார் என்றும், தன்னை செந்தில் என்றே அழைப்பார் எனவும் தெரிவித்துள்ளார். நடிக்க வேண்டும் என்ற ஆசையை முதலில் அம்மாவிடம் தான் சொன்னதாகவும், அவரே அப்பாவை சம்மதிக்க வைத்து, தான் நடிகனாக காரணமாக இருந்தார் என்றும் கூறியுள்ளார்.

    சினிமா ஆசையும் அம்மாவின் ஆசியும்

    சினிமா ஆசையும் அம்மாவின் ஆசியும்

    அதில், அம்மா என்றாலே தெய்வத்திற்கு சமமானவர் தான், ஆனால், எங்களுக்கு இன்னும் ஒருபடி மேல் எனக் குறிப்பிட்டுள்ளார். நான் உட்பட விஜய், தங்கை மூவரையும் ஒரேமாதிரி தான் நடத்துவார் என்றும், தன்னை செந்தில் என்றே அழைப்பார் எனவும் தெரிவித்துள்ளார். நடிக்க வேண்டும் என்ற ஆசையை முதலில் அம்மாவிடம் தான் சொன்னதாகவும், அவரே அப்பாவை சம்மதிக்க வைத்து, தான் நடிகனாக காரணமாக இருந்தார் என்றும் கூறியுள்ளார்.

    நிச்சயம் ஜெயிப்பாய்

    நிச்சயம் ஜெயிப்பாய்

    நடிக்கத் தொடங்கியதில் இருந்து, 22 வருடங்களாக தனக்கு மிகப்பெரிய பக்கபலமாகவும், ஊக்கமாகவும் இருந்தது அம்மா தான். அவர் தான் "நீ நிச்சயம் பெரிய அளவில் ஜெயிப்பாய்," என்று தன்னிடம் அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பார்.. தான் பெரிய வெற்றியை அடைந்துவிட வேண்டும் என அவர் போகாத கோயில் இல்லை, செய்யாத பிரார்த்தனைகள் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

    அம்மாவின் ஆசை

    அம்மாவின் ஆசை

    தம்பி விஜய் போன்று சினிமா மூலம் பொருளாதார ரீதியாக அம்மாவுக்கு பெரிதாக எதுவும் செய்யமுடியவில்லை. இருந்தாலும், அம்மா கை காட்டிய பெண்ணையே திருமணம் செய்தேன். அம்மாவிற்கு தன்னால் பணம் கொடுக்க முடியவில்லை என்றாலும், அதிகமதிகமாக பாசத்தையும் அன்பையும் கொடுத்தேன. ஆனால், அதையும் கூட அம்மா தனக்கு பல மடங்கு அதிகமாக திருப்பித் தந்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்

    நீ ஜெயிச்சப்பிறகுதான் போவேன்

    நீ ஜெயிச்சப்பிறகுதான் போவேன்

    அம்மாவின் உடல்நிலை முடியாமல் போனபோதெல்லாம், மருத்துவர்களே ஆச்சரியப்படும் வகையில் அவர் மீண்டு வந்தார். அப்போதெல்லாம் "நீ வெற்றிப் பெறுவதை பார்க்காமல், தான் போய் விடமாட்டேன் என புன்னகை மலர கூறி தன்னை தட்டிக் கொடுத்தார். 'She is a Fighter' ஆனால், யாருமே எதிர்ப்பார்க்காத போது, எங்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு சென்று விட்டார்.

    நான் அனாதை

    நான் அனாதை

    தனக்கு பாசத்தை பெரிதாக வெளிப்படுத்த தெரியாது என்ற போதும், அம்மா இறப்பதற்கு முன் அவரிடம் நிறைய பேசினேன். அப்போதும் அவர் தன்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் போய் விட்டால் தான் அனாதை என்று உறவினரிடம் சொன்னபோது, "அப்படியெல்லாம் உன்னை விட்டு செல்லமாட்டேன்" என்று அம்மா நம்பிக்கையோடு கூறினார். ஆனால் இன்று அவர் எங்களுடன் இல்லை என மிகுந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

    மனங்களை வென்றவர்

    மனங்களை வென்றவர்

    ஒருவருக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும், உதவி செய்ய வேண்டும் என்பதற்கு உதாரணமாக அம்மா திகழ்ந்தார். வீட்டுக்கு வரும் யாரும் சாப்பிடாமல் செல்லக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருப்பார் என தெரிவித்துள்ளார். அந்த அன்பின் காரணமாக, அம்மா இறந்ததும் எங்கெங்கிருந்தோ எல்லாம் வந்த ஏராளாமானோர், அவருக்கு அஞ்சலி செலுத்திச் சென்றனர் என குறிப்பிட்டுள்ளார். .

    நால்வரையும் தாங்கிப் பிடித்தார்

    நால்வரையும் தாங்கிப் பிடித்தார்

    அப்பா, நான், விஜய், தங்கை என வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட எங்கள் நால்வரையும் தாங்கிப் பிடித்தது அம்மா தான் என கூறியுள்ள உதயா,. குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என கற்றுக் கொடுத்ததும் அவர் தான் கூறியுள்ளார். மேலும், கணவன் - மனைவி உறவு, பெற்றோரிடம் நடந்து கொள்ள கூடிய முறைகள், பிள்ளைகளை வளர்ப்பது என எல்லாவற்றுக்கும் எல்லோருக்கும் மிகச்சிறந்த உதாராணமாக திகழ்ந்த அவருக்கு. பேரக்குழந்தைகளை மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

    அம்மாவின் விருப்பம்

    அம்மாவின் விருப்பம்

    தம்பி விஜய்யும் தானும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற அம்மாவின் விருப்பம், தலைவா படத்தில் கை கூடியது. தம்பி விஜய் தான் அம்மாவிற்கு மிகச்சிறந்த சிகிச்சையை உறுதி செய்தார். குடும்பத்தினர் அனைவரும் அம்மாவை உடனிருந்து கவனித்தோம். இருந்தாலும் எதிர்ப்பார்க்காத தருணத்தில் எங்களை விட்டு அம்,மா பிரிந்து சென்று விட்டார் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

    அம்மாவின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்

    அம்மாவின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்

    உடலால் அம்மா எங்களுடன் இல்லை என்றறாலும், உணர்வால் அவர் எங்களுக்குள் வாழ்கிறார். அவரது வாய்ஸ் மெசேஜ்களை தான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அம்மாவின் குரல் தனக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது எனவும் நெஞ்சுருக பதிவிட்டுள்ளார். கடவுளாக இருந்து அம்மா எங்களை தொடர்ந்து வழி நடத்துவார் என்பது நிச்சயம், இந்த கடினமான நேரத்தில் எங்களுடன் இருந்து துக்கத்தை பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் வணக்கங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

    செந்தில் எனும் உதயா

    செந்தில் எனும் உதயா

    இறுதியாக லவ் யூ அம்மா, மிஸ் யூ அம்மா என உருக்கமாக பதிவிட்டுள்ள அவர், அன்பு மகன் செந்தில் எனும் உதயா எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை படித்த ரசிகர்களும் திரைப் பிரபலங்களும் நடிகர் உதயாவிற்கு தொடர்ந்து ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர். அம்மா மீதான அன்பையும், அவரது இழப்பையும் நடிகர் உதயா இவ்வளவு உருக்கமாக பதிவிட்டுள்ளது, பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

    English summary
    "Amma said, you will go only after winning": But, actor Udaya melted thinking about his mother
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X