twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்திய ஆஸ்கர் ஜூரியாக அமோல் பாலேகர் நியமனம்!

    By Shankar
    |

    இந்திய ஆஸ்கர் ஜூரியாக பிரபல நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் அமோல் பாலேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    திரைத்துறையில் சர்வதேச அளவில் மிகப் பெரிய அங்கீகாரமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான படங்கள் மற்றும் கலைஞர்களைப் பரிசீலிக்க மத்திய அரசு குழு அமைத்துள்ளது.

    Amol Palekar appointed chairman of India’s Oscar jury

    இந்தக் குழுவின் தலைவராக பிரபல நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அமோல் பாலேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த ஆண்டு நடக்கும் 88வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவிலிருந்து செல்லும் படங்களை அமோல் பாலேகர் தலைமையிலான குழுதான் தேர்வு செய்யும்.

    இதனை மும்பையைச் சேர்ந்த பிலிம் ஃபெடரேஷன் ஆப் இந்தியாவின் பொதுச் செயலாளர் சுப்ரான் சென் அறிவித்துள்ளார்.

    2005-ஆம் ஆண்டு ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்தியப் படமான பஹேலியை இயக்கியவர் அமோல் பாலேகர் என்பது குறிப்பிடத்தக்கது.

      English summary
      Veteran actor-director Amol Palekar has been appointed as chairman of India's Oscar jury, which will select the country's official entry in the best foreign film category of the 88th Academy Awards.
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X