Don't Miss!
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- News ஓயாத மணிப்பூர் கலவரம்.. பூத்களை கைப்பற்ற முயற்சி? மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
பட வாய்ப்பு இல்லை: வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
மும்பை: பிரபல நடிகர் ஒருவர் பட வாய்ப்புகள் இல்லாததால் வாட்ச்மேன் வேலை பார்த்து வருகிறார்.
பிளாக் ஃபிரைடே, குலால், பாட்டியாலா ஹவுஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சாவி சித்து. அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் பண பிரச்சனை ஏற்பட்டது.
இதையடுத்து அவர் ஒரு இடத்தில் வாட்ச்மேன் வேலைக்கு சேர்ந்தார்.
நான் உண்மையை சொல்லட்டுமா, அப்புறம் இருக்கு வேடிக்கை: ப்ரியா வாரியர்
வாட்ச்மேன்
சாவி சித்து பற்றிய வீடியோ வெளியானதை பார்த்த பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், இயக்குநர் அனுராக் கஷ்யப் ஆகியோர் அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர். அனுராக் கஷ்யப் தான் சாவி சித்துவை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைத்தார்.
|
ராஜ்குமார் ராவ்
வாய்ப்பு கிடைக்கவில்லை என்று முடங்கிவிடாமல் வாட்சமேன் வேலைக்கு சென்ற சாவி சித்துவை ராஜ்குமார் ராவ் பாராட்டியுள்ளார். மேலும் சாவி சித்துவுக்கு உதவு செய்வதாகவும் கூறியுள்ளார்.
பணம்
வாட்ச்மேன் வேலை பார்ப்பது குறித்து சாவி கூறியதாவது, தினமும் 12 மணிநேரம் வேலை. பேருந்தில் டிக்கெட் எடுக்கக் கூட காசு இல்லை. தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது எல்லாம் கனவு மாதிரி ஆகிவிட்டது. என் நிதி நிலை சரியில்லை என்றார்.
அனுராக் கஷ்யப்
சாவி சித்து பற்றி அனுராக் கஷ்யப் கூறியிருப்பதாவது, சாவி சித்துவை ஒரு நடிகராக மதிக்கிறேன். அவரை நான் மூன்று முறை என் படங்களில் நடிக்க வைத்துள்ளேன். பட வாய்ப்பு கிடைக்காவிட்டால் பலர் மதுவுக்கு அடிமையாகிவிடுகிறார்கள். அப்படி இருக்கும்போது சித்து மரியாதையுடன் வாழ வேலைக்கு சென்றதை மதிக்கிறேன் என்றார்.