Don't Miss!
- News மிளகாய் பொடி ஆயுதம்! ஆந்திராவில் சினிமா ஸ்டைலில்.. மண்டபத்திற்குள் நுழைந்து மணப்பெண்ணை கடத்த முயற்சி
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சிறுமி விவகாரம்: அனாமிகா கைதாகிறார்? வீட்டு வேலைக்கார சிறுமி கொடுத்த புகாரின் பேரில் நடிகை அனாமிகா விரைவில் கைது செய்யப்படலாம் என்றுகூறப்படுகிறது.பதவி படுத்தும் பாடு படத்தில் நடித்த நடிகை அனாமிகா, தன்னிடம் ரூ. 7 லட்சம் பண மோசடி செய்து விட்டதாக சென்னைமாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் பிரபல சினிமா சண்டைப் பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் ஒரு புகார்கொடுத்தார். அவர் புகார் கொடுத்த சில நாட்களிலேயே அனாமிகாவும் ஒரு புகாரைக் கொடுத்தார். அதில் தன்னை பாலியல் ரீதியாகஜாக்குவார் தங்கம் கொடுமைப்படுத்துவதாகவும், கல்யாணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்வதாகவும், அதற்கு தான் இடம் கொடுக்காத காரணத்தால் தான் தன் மீது பண மோசடி புகாரை அவர் கூறியுள்ளதாகவும்தெரிவித்திருந்தார்.இவர்கள் இருவரது மனுக்களையும் பெற்ற போலீஸார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். இந் நிலையில் முன் ஜாமீன் கோரி ஜாக்குவார் தங்கம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அதை விசாரித்த நீதிபதி முருகேசன், ஜாக்குவார் தங்கத்திற்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கினார். அதன்படி தினமும் காலை 10 மணிக்கு சூளைமேடு காவல் நிலையத்தில் (அங்கு தான் ஜாக்குவாருக்கு எதிராக வழக்குதொடரப்பட்டுள்ளது) ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கிடையே அனாமிகா மீது வேலைக்கார சிறுமி கொடுத்த புகாரின் மீது போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.இந்த வழக்கில் அவர் இன்னும் முன் ஜாமீன் பெறவில்லை. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்றுகூறப்படுகிறது. இந்த வழக்கை நுங்கம்பாக்கம் உதவி போலீஸ் கமிஷனர் காளி விசாரணை நடத்தி வருகிறார். வழக்கு தொடர்பாக பல முறைஅனாமிகாவை போலீஸார் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் போலீஸாரிடம் அவர் சிக்கவில்லை.தற்போது அனாமிகா தெலுங்குப் படத்தில் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டு வேலைக்கார சிறுமி கொடுத்த புகாரின் பேரில் நடிகை அனாமிகா விரைவில் கைது செய்யப்படலாம் என்றுகூறப்படுகிறது.
பதவி படுத்தும் பாடு படத்தில் நடித்த நடிகை அனாமிகா, தன்னிடம் ரூ. 7 லட்சம் பண மோசடி செய்து விட்டதாக சென்னைமாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் பிரபல சினிமா சண்டைப் பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் ஒரு புகார்கொடுத்தார்.
அவர் புகார் கொடுத்த சில நாட்களிலேயே அனாமிகாவும் ஒரு புகாரைக் கொடுத்தார். அதில் தன்னை பாலியல் ரீதியாகஜாக்குவார் தங்கம் கொடுமைப்படுத்துவதாகவும், கல்யாணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்வதாகவும்,
அதற்கு தான் இடம் கொடுக்காத காரணத்தால் தான் தன் மீது பண மோசடி புகாரை அவர் கூறியுள்ளதாகவும்தெரிவித்திருந்தார்.இவர்கள் இருவரது மனுக்களையும் பெற்ற போலீஸார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
இந் நிலையில் முன் ஜாமீன் கோரி ஜாக்குவார் தங்கம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அதை விசாரித்த நீதிபதி முருகேசன், ஜாக்குவார் தங்கத்திற்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கினார்.
அதன்படி தினமும் காலை 10 மணிக்கு சூளைமேடு காவல் நிலையத்தில் (அங்கு தான் ஜாக்குவாருக்கு எதிராக வழக்குதொடரப்பட்டுள்ளது) ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே அனாமிகா மீது வேலைக்கார சிறுமி கொடுத்த புகாரின் மீது போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.இந்த வழக்கில் அவர் இன்னும் முன் ஜாமீன் பெறவில்லை. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்றுகூறப்படுகிறது.
இந்த வழக்கை நுங்கம்பாக்கம் உதவி போலீஸ் கமிஷனர் காளி விசாரணை நடத்தி வருகிறார். வழக்கு தொடர்பாக பல முறைஅனாமிகாவை போலீஸார் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் போலீஸாரிடம் அவர் சிக்கவில்லை.
தற்போது அனாமிகா தெலுங்குப் படத்தில் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.