Don't Miss!
- News நடுவானில் பெங்களூர் விமானத்தை நெருங்கிய எமிரேட்ஸ் விமானம்.. மிக பெரிய விபத்து தவிர்ப்பு! பகீர்
- Automobiles ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
'இது நம்ம ஆளு' திரைப்படத்திற்கு 50 மதிப்பெண் 'கொடுத்த' ஆனந்த விகடன்! சிம்பு ரசிகர்கள் 'ஷாக்'
சென்னை: 'இது நம்ம ஆளு' திரைப்படத்திற்கு ஆனந்த விகடன் விமர்சன குழு 50 மதிப்பெண் கொடுத்ததாக நினைத்து படித்துவிட்டு சிம்பு ரசிகர்கள் ஷாக் ஆனகதை இணையத்தின் விவாத பொருளாகியுள்ளது.
திரைப்படங்களுக்கு ஆனந்த விகடன் விமர்சன குழு வழங்கும் மதிப்பெண்களுக்கு, சினிமாத்துறை மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும். பல நீண்ட காலமாக இந்த போக்கு சினிமாத்துறையில் உள்ளது.
இந்த நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்து, நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று ரிலீசாகியுள்ள 'இது நம்ம ஆளு' திரைப்படத்திற்கு விகடன் எத்தனை மதிப்பெண் தரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது.
இதனிடையே, ஆனந்தவிகடன் தனது டிவிட்டர் பக்கத்தில், "இது நம்ம ஆளு விகடன் மார்க் - 50/100" என்று குறிப்பிட்டிருந்தது.
வார இதழில்தான் மதிப்பெண் போடுவது வழக்கம் என்பதை கூட மறந்துவிட்ட சிம்பு ரசிகர்கள், அடேங்கப்பா, வழக்கமாக பெரிய ஸ்டார் படங்களுக்கே 40 முதல் 43 மதிப்பெண்தான் சராசரியாக கிடைக்கும். இது நம்ம ஆளு படத்திற்கு 50 மார்க் கிடைத்துள்ளதே என்ற குஷியில் கிளிக் செய்து பார்த்தனர்.
பின்னர்தான் தெரிந்தது, பாக்கியராஜ் நடிப்பில் வெளியாகியிருந்த 'இது நம்ம ஆளு' திரைப்படத்திற்கு அந்த காலத்தில் விகடன் வழங்கிய மதிப்பெண் 50 என்பது. ஷாக்கான ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் தங்கள் ஆதங்கத்தை பகிர்ந்து வருகிறார்கள்.