ஆனந்த பாபு கவலைக்கிடம்
பழம் பெரும் நடிகர் நாகேஷின் மகனும் நடிகருமான ஆனந்த பாபு கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஆனந்த பாபு சிறிது காலமாகவே மன நலமும் பாதிக்கப்பட்டிருந்தார்.இடையில் கொஞ்சம் தேறினார். இதையடுத்து இயக்குனர் சரணிடம் அஸிஸ்டென்டாக சேர்ந்தார்.
ஆனால், மீண்டும் அவருக்கு மன நல பாதிப்பு தீவிரமானதால் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ஆனால், உடல் நிலை மிகவும் மோசமடைந்ததால் அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவரது உடல் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது.
Comments


Click it and Unblock the Notifications