Don't Miss!
- News வாக்கு பெட்டியில் தாமரை.. வாக்குச்சாவடி வாசலிலும் "தாமரைப்பூ".. குவிந்த திமுகவினர்.. புதுச்சேரி பரபர
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Lifestyle உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வீட்டுக்கு வந்த 'மாஜி' ஆஞ்சநேயனை விரட்டியடித்த அனன்யா குடும்பத்தினர்!
கேரள தொழிலதிபர் ஆஞ்சநேயனுக்கும் நடிகை அனன்யாவுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயம் நடந்தது. ஆனால் ஆஞ்சநேயன் ஏற்கெனவே திருமணமாகி, குழந்தையெல்லாம் உள்ள விவரம் பின்னர்தான் அனன்யா குடும்பத்துக்கு தெரிய வந்தது.
ஆனால் ஆஞ்சநேயன் முதல் மனைவியை பிரிய விவாகரத்து மனு தாக்கல் செய்திருப்பதாகவும், இது அனன்யாவுக்கு தெரியும் என்றும் தெரிவித்தார். ஆஞ்சநேயனை திருமணம் செய்வதில் உறுதியாக இருப்பதாக சில தினங்கள் வரை சொல்லிக் கொண்டிருந்த அனன்யா, திடீரென தன் முடிவை மாற்றிக் கொண்டார்.
அப்போதுதான் அனன்யாவைப் பார்க்க அவரது சொந்த ஊரான பெரும்பாவூருக்கு வந்தாராம் ஆஞ்சநேயன். ஆனால் அவரிடம் பேச மறுத்த அனன்யா குடும்பத்தினர், அவரை வீட்டுக்குள் நுழைய அனுமதிக்காமல் விரட்டிவிட்டார்களாம்.
இதைத் தொடர்ந்து திருமணத்தை ரத்து செய்துவிட்டனர் அனன்யா குடும்பத்தினார். ஆனால் திருமணம் தள்ளிப் போடப்பட்டிருப்பதாக ஆஞ்சநேயன் சொல்லி வருகிறார்.
இன்னொரு பக்கம், திருமணம் நின்ற கையோடு, தமிழ் மற்றும் மலையாளப் படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்கும் வேலையில் மும்முரமாகிவிட்டார் அனன்யா.
சமீபத்தில்தான் இவர் நடித்த மலையாளப் படமான மாஸ்டர்ஸ் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் புதிய பட வாய்ப்புகள் அவருக்கு வர ஆரம்பித்துள்ளன. ஆஞ்சநேயனுடனான திருமணம் தள்ளிப் போயுள்ளதால், அடுத்தடுத்த படங்களுக்கு தேதிகளை ஒதுக்கியுள்ளார்.
தமிழிலும் அவர் சில படங்களில் நடிக்க பேசி வருகிறார்.
திருமண விவகாரம், மீண்டும் நடிப்பது குறித்து அனன்யா கூறுகையில், "என் திருமணத்தை பற்றி தினமும் நிறைய வதந்திகள் பரவிக்கொண்டு இருக்கின்றன. இது என் தனிப்பட்ட விவகாரம். பொதுவில் பேச விரும்பவில்லை. இனி திருமணம் குறித்து யாரும் என்னிடம் பேச வேண்டாம். சினிமாவில் இப்போது பிஸியாகி வருகிறேன்," என்றார்.
இதுகுறித்து 'பவர் ஸ்டார்' கெட்டப்பிலிருக்கும் ஆஞ்சநேயன் கூறுகையில், "யாரோ மூன்றாவது நபர் சூழ்ச்சி செய்து எங்களைப் பிரித்துவிட்டார்கள். அவர்கள் விருப்பப்படி செய்யட்டும். நான் என்ன சொல்ல முடியும்," என்றார் சோகமாக!