'நாடோடிகள்' அனன்யா 'நோ' சொன்னதால் அமலா பாலுக்கு அடித்த ஜாக்பாட்
சென்னை: மைனா படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் அனன்யாவை தான் கேட்டார்களாம்.
சிந்து சமவெளி படத்தில் நடித்த அமலா பாலுக்கு மைனா படம் தான் பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. நடிக்க வந்த புதிதில் ஏதோ தெரியாத்தனமாக சிந்து சமவெளி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று அமலா கூறினார்.
அமலா பாலை அடையாளம் காட்டிய மைனா படத்திற்கு முதலில் அவரை அணுகவில்லை.

பிசி
நாடோடிகள் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் அனன்யா. அவரை தான் மைனா படத்தில் நடிக்க கேட்டார்களாம். டேட்ஸ் இல்லாததால் நடிக்க முடியாது என்று அவர் கூறிவிட்டார்.

அமலா
அனன்யா பிசியாக இருந்ததால் அமலா பாலை கேட்க அவர் மைனா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். அந்த ஒரு படத்தால் கோலிவுட்டில் ஏகப் பிரபலம் ஆனார்.

பிரபலம்
அமலா பால் கோலிவுட்டின் முன்னணி நடிகையானார். நல்லா நடிக்குது பொண்ணு என்று பெயர் எடுத்தாலும் அனன்யாவால் பெரிய இடத்திற்கு வர முடியாமல் போனது.

செட்டில்
ஆஞ்சநேயன் என்ற தொழில் அதிபரை மணந்தார். திருமணத்திற்கு பிறகும் அனன்யா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தன் மனதிற்கு பிடித்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











