Don't Miss!
- News நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க! வாக்கு சதவீதத்தில் பெரும் குளறுபடி! விஐபி தொகுதிகளில் இத்தனை மாற்றமா?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அன்பானவன் அடங்காதவன் அசராதவன்: முதற்கட்ட படப்பிடிப்பை 'விரைந்து' முடித்த சிம்பு!
சென்னை: 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, ஸ்ரேயா, மஹத், மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்'.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல் பகுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 1980 களில் வருவது போன்ற தோற்றத்தில் சிம்பு இதில் நடித்து வந்தார்.
ஆதிக் ரவிச்சந்திரன்
இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.இதுகுறித்து அவர் ''அன்பானவன் அடங்காதவன் அசராதவன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது. இதற்கு சிம்பு அண்ணாவின் கடின உழைப்புதான் காரணம்'' என்று புகழ்ந்திருக்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜா
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. (50 ஆண்டுகளுக்குப்பின் ஒரு படத்தில் இவ்வளவு பாடல்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது)
40 கோடி
40 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.மைக்கேல் ராயப்பன் குளோபல் இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சொந்தமாகத் தயாரித்து வருகிறார்.
ஜனவரி
சிம்பு 3 கெட்டப்பில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை விரைவாக முடித்து 2017 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
கால்ஷீட் சொதப்பலால் 'அச்சம் என்பது மடமையடா' படம் சிக்கலில் இருக்கும்போது ஆதிக் ரவிச்சந்திரன் படத்துக்கு சிம்பு கொடுத்த ஒத்துழைப்பை எண்ணி மொத்தக் கோலிவுட்டும் தற்போது வியப்பில் ஆழ்ந்துள்ளது.