Don't Miss!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நானும் தான் அன்புச்செழியனிடம் கடன் வாங்குகிறேன், அவரை மிகைப்படுத்தி சித்தரிக்கிறார்கள்: விஜய் ஆண்டனி
Recommended Video
சென்னை: அன்புச்செழியனை அனைவரும் மிகைப்படுத்தி சித்தரிப்பதாக தோன்றுகிறது என்று நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
பைனான்ஸியர் அன்புச்செழியனின் தொல்லை தாங்க முடியாமல் நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டார். தனது மரணத்திற்கு அன்புச்செழியன் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அசோக் குமார்
நடிகர் திரு. சசிகுமார் அவர்கள், மிகவும் சிறந்த இயக்குனர் மற்றும் நல்ல மனிதர். அவரது உறவினர் திரு. அசோக் குமார் அவர்களின் தற்கொலையை நினைத்து நான் மிகவும் மனவேதனைப்படுகிறேன். திரு. அசோக் குமார் அவர்கள் தனது மனைவி, பெற்றோர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு, தற்கொலை செய்யும் முடிவை தவிர்த்திருக்க வேண்டும்.
மிகைப்படுத்தி
நான் கடந்த 6 வருட காலமாக, தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட வினியோகஸ்தர் திரு. அன்புச் செழியனிடம் பணம் வாங்கித் தான் படங்கள் எடுத்து வருகிறேன். வாங்கிய பணத்தை முறையாக திரும்ப செலுத்தியும் வருகிறேன். இதுநாள் வரையில் அவர் என்னிடம் சரியான முறையில் தான் நடந்து வருகிறார். அனைவரும் அவரை மிகைப்படுத்தி சித்தரிப்பதாக தோன்றுகிறது.
கடன்
திரைப்படத் துறையில் 99% தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள், கடன் வாங்கி படம் எடுத்து தான் இந்நாள் வரையில் முன்னேறி இருக்கிறார்கள்.
திரு. அசோக் குமார் அவர்களின் மரணம் தற்கொலையின் கடைசி மரணமாக இருக்க வேண்டும்.
வேதனை
நான் தற்கொலைக்கு எதிரானவன். ஏனென்றால் தற்கொலை செய்து கொண்ட என் தந்தையால் நானும், என் தாய் மற்றும் என் குடும்பம் அனுபவித்த கஷ்டம், எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கும் கடன் இருக்கிறது, உழைத்துக் கொண்டிருக்கிறேன். RIP- திரு. அசோக் குமார் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.