Don't Miss!
- News மத்திய சென்னையில் ஒரு லட்சம் வாக்குகளை திமுக நீக்கிவிட்டது.. பாஜக வினோஜ் செல்வம் பகீர் குற்றச்சாட்டு
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
அன்புச்செழியன் மிரட்டவில்லை, ரொம்ப நைஸ், ஸ்வீட்டான நபர்: சொல்வது தேவயானி
Recommended Video
சென்னை: பைனான்ஸியர் அன்புச்செழியன் ரொம்ப நல்லவர், ஸ்வீட்டானவர், மரியாதையானவர் என்று நடிகை தேவயானி தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் அசோக் குமாரின் தற்கொலைக்கு காரணமான பைனான்ஸியர் அன்புச்செழியன் ஒரு காலத்தில் நடிகை தேவயானியை பணத்திற்காக மிரட்டியதாக பேசப்பட்டது.
இந்நிலையில் அன்புச்செழியன் பற்றி தேவயானி பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் தேவயானி கூறியிருப்பதாவது,
ஸ்வீட்
கொடுக்க வேண்டிய பணத்தை சரியான நேரத்தில் அன்புவிடம் கொடுத்துவிட்டோம். என்னை பொறுத்த வரைக்கும் எப்ப அவரை சந்தித்தாலும் ரொம்ப நல்லவர், ரொம்ப மரியாதையுடன் ஸ்வீட்டாக பேசுவார் பழகுவார்.
அன்பு
நான் அவரை இரண்டு முறை தான் சந்தித்துள்ளேன். நம்ம படம் முடிச்ச பிறகு மற்றும் தயாரிப்பாளர் சங்க தேர்தல் டைம். நாங்கள் எல்லோரும் தயாரிப்பாளர்களாக அவரிடம் வாக்கு கேட்க சென்றபோது பார்த்திருக்கிறேன்.
மரியாதை
அவர் எங்களுக்கு எந்த தொல்லையும் கொடுக்கவில்லை. படப்பிடிப்பு தளத்திற்கு வருவதோ தொல்லை கொடுப்பதோ இல்லை. ரொம்ப நைஸ், ஸ்வீட்டான நபர். எப்பொழுதுமே அப்படித் தான் பார்த்திருக்கிறோம்.
மருத்துவர்
அவருடைய மகளுக்கு கூட தோல் அலர்ஜி இருக்கும்போது என் கணவரிடம் தான் டாக்டரை பரிந்துரைக்குமாறு கேட்டார். என் கணவர் தான் ஒரு நல்ல மருத்துவரை பரிந்துரை செய்தார். அவர் ரொம்ப நல்ல நைஸ், ஸ்வீட் பர்சன் என்றார் தேவயானி.