Don't Miss!
- News வேலையில்லா பிரச்சினைக்கு அரசு என்ன செய்ய முடியும்.. அதிர வைத்த மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர்
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
மேடையில் ஒரே குழப்பம்.. ஏகப்பட்ட விஜய்.. பாவனாவின் பதற்றம் !
சென்னை : மாஸ்டர் இசை வெளியீட்டு விழா மேடையில் ஏகப்பட்ட விஜய் இருந்ததால் பதற்றமாக இருந்ததாக தொகுப்பாளர் பாவனா கூறியுள்ளார்.
தொலைக்காட்சி தொகுப்பாளரான பாவனா சமீபத்தில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கினார். இவர் இதற்கு முன் பல இசை வெளியீட்டு விழாக்களையும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியவர். அதை தாண்டி கடந்த சில வருடங்களா ஐ.பி.எல் போட்டிகளிலும் முன்னணி தமிழ் தொகுப்பாளராக செயல்பட்டு வருகிறார் .
பாவனா மாஸ்டர் படத்திற்கு முன் விஜயின் துப்பாக்கி படத்தை 2012ல் தொகுத்து வழங்கியிருக்கிறார். அந்த சமயங்களில் இசை வெளியீட்டு விழாக்கள் பெரிதான பிரம்மாண்டத்தில் நடைபெறுவதில்லை. ஆடம்பரம் இன்றி சிறிய மேடைகளில் படக்குழுவால் குறைந்ததது ஒரு மணி நேரத்திற்குள் நடைபெற்று விடும் .
இதை பற்றி கூறிய பாவனா, துப்பாக்கி இசை வெளியீட்டு விழாவை நான் தொகுத்து வழங்க போகிறேன் என்று எனக்கே 24 மணி நேரம் முன்னர் தான் தெரியும் கடைசி நேரத்தில் தான் சொன்னார்கள். மிகவும் அவசர அவசரமாக இசை வெளியீட்டிற்கு விழாவுக்கு தயாராகி போய் தொகுத்து வழங்கியதை பகிர்ந்தார். ஆனால் மாஸ்டர் வெளியீட்டு விழாவிற்கு ஒரு வாரம் முன்னரே தகவல் வந்து விட்டது அதனால் சரியாக தயாராகிவிட்டேன் என கூறினார் .
மேலும் தனது நண்பரும் சக தொகுப்பாளர் பெயரும் விஜய் தான். அதே நேரத்தில் அந்த மேடை நாயகன் தளபதி விஜய், விஜய் சேதுபதி என ஏகப்பட்ட விஜய். இதனால் குழப்பமாகி பதற்றமடைந்துவிடக்கூடாது என்பதற்காக என் நண்பன் விஜயை நான் வாடா போடா என்றே கூறினேன் என்றார்.
மேலும் தான் ஐபிஎல் மூலம் பல ஊர்களுக்கு சென்றுள்ளேன் உண்மையிலே நகைச்சுவை ரசனை அதிகம் உள்ளவர்கள் தமிழர்கள். அதிலும் தமிழ் மீம் கிரியேட்டர்கள் தான். அவர்கள் மாஸ்டர் வெளியீட்டிற்கு போட்ட அனைத்து மீம்களையும் பார்த்தேன் அனைத்தும் அருமையாக இருந்தது. என்னை கிண்டல் செய்து போடப்பட்ட பல மீம்ஸ்கள் எனக்கே பிடித்தது என கூறினார் .
பாவனாவும் நடிகர் அர்ஜீன் தாஸும் நண்பர்களாம். ஒன்றாக பள்ளியில் படித்தவர்கள். நீண்ட முயற்ச்சிக்கு பிறகே அர்ஜீனுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இதைபற்றி பேசி தான் நான் மாஸ்டர் பட மேடையில் அவரை அழைத்தேன். ஆனால் நேரமின்மை காரணத்தால் அதை ஒளிப்பரப்பவில்லை என வருத்தத்துடன் கூறினார்.