Don't Miss!
- Lifestyle அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் குறிப்புகள்..!
- News நாளை வாக்குப்பதிவு நடைபெறும் 21 மாநிலங்கள்.. 102 லோக்சபா தொகுதிகள் இதுதான்! முழுவிவரம்
- Finance ஓடியாங்க ஓடியாங்க.. தங்கம் விலை திடீர்ன்னு குறைஞ்சிருக்கு..!! செம சான்ஸ்..!
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Automobiles இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சினிமா நூற்றாண்டு விழா: கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் வரவில்லை!
சென்னை: இன்று மாலை நடக்கும் இந்திய சினிமாவின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கர்நாடக, தெலுங்கு முதல்வர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு சர்ச்சைகள், மனஸ்தாபங்களுக்கிடையே நடந்து வருகிறது இந்திய சினிமா நூற்றாண்டு விழா.
முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பு வெறுப்புகளுக்கேற்பவே இந்த விழா வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிருப்திக் குரல்கள் அதிகரித்து வருகின்றன.
கன்னடம், தெலுங்கு, மலையாள சினிமா நிகழ்ச்சிகள் கடந்த இரண்டு தினங்களாக நடந்து வந்தன. இன்று நிறைவு விழா.
இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கிறார். முதல்வர் ஜெயலலிதா நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.
ஆந்திர, கேரள மற்றும் கர்நாடக முதல்வர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால் இப்போது கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் கலந்து கொள்ளவில்லை. இன்றை அரசு விளம்பரத்திலும் அவர்கள் பெயர் இல்லை. கேரள முதல்வர் உம்மன் சாண்டி மட்டும் வருகிறார்.
தமிழக ஆளுநர் ரோசய்யாவும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.