twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமா நூற்றாண்டு விழா: கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் வரவில்லை!

    By Shankar
    |

    சென்னை: இன்று மாலை நடக்கும் இந்திய சினிமாவின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கர்நாடக, தெலுங்கு முதல்வர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    பல்வேறு சர்ச்சைகள், மனஸ்தாபங்களுக்கிடையே நடந்து வருகிறது இந்திய சினிமா நூற்றாண்டு விழா.

    முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பு வெறுப்புகளுக்கேற்பவே இந்த விழா வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிருப்திக் குரல்கள் அதிகரித்து வருகின்றன.

    கன்னடம், தெலுங்கு, மலையாள சினிமா நிகழ்ச்சிகள் கடந்த இரண்டு தினங்களாக நடந்து வந்தன. இன்று நிறைவு விழா.

    Andhra, Karnataka CMs not attending Cinema 100 event today

    இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கிறார். முதல்வர் ஜெயலலிதா நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.

    ஆந்திர, கேரள மற்றும் கர்நாடக முதல்வர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.

    ஆனால் இப்போது கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் கலந்து கொள்ளவில்லை. இன்றை அரசு விளம்பரத்திலும் அவர்கள் பெயர் இல்லை. கேரள முதல்வர் உம்மன் சாண்டி மட்டும் வருகிறார்.

    தமிழக ஆளுநர் ரோசய்யாவும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    English summary
    Chief Ministers of Andhra and Karnataka will not attend the Cinema Centenary function today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X