Don't Miss!
- News வெள்ளை முடி கருப்பாக.. நரைமுடி மறையணுமா? செம்பருத்தி போதுமே.. இந்த 4 இருந்தாலே கருகரு முடி வளரும்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களை பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Sports இந்தியா vs பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி.. 17 ஆண்டுக்கு பிறகு நடைபெறுமா? ரோகித் நகர்த்திய காய்
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சினிமா நூற்றாண்டு விழா: கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் வரவில்லை!
சென்னை: இன்று மாலை நடக்கும் இந்திய சினிமாவின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கர்நாடக, தெலுங்கு முதல்வர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு சர்ச்சைகள், மனஸ்தாபங்களுக்கிடையே நடந்து வருகிறது இந்திய சினிமா நூற்றாண்டு விழா.
முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பு வெறுப்புகளுக்கேற்பவே இந்த விழா வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிருப்திக் குரல்கள் அதிகரித்து வருகின்றன.
கன்னடம், தெலுங்கு, மலையாள சினிமா நிகழ்ச்சிகள் கடந்த இரண்டு தினங்களாக நடந்து வந்தன. இன்று நிறைவு விழா.
இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கிறார். முதல்வர் ஜெயலலிதா நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.
ஆந்திர, கேரள மற்றும் கர்நாடக முதல்வர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால் இப்போது கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் கலந்து கொள்ளவில்லை. இன்றை அரசு விளம்பரத்திலும் அவர்கள் பெயர் இல்லை. கேரள முதல்வர் உம்மன் சாண்டி மட்டும் வருகிறார்.
தமிழக ஆளுநர் ரோசய்யாவும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.