லிப் டூ லிப் முத்தப்போட்டோ: ஆண்ட்ரியாவிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் அனிருத்
சென்னை: சமீபத்தில், நடிகை ஆண்ட்ரியாவும் இசையமைப்பாளர் அனிருத்தும் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டுக் கொள்ளும் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.
அது பற்றி கேட்டவர்களிடம், 'அது மிகவும் பழைய படம்' என்ற ஒற்றை வரியில் தனது கருத்தை தெரிவித்திருந்தார் ஆண்ட்ரியா. ஆனால், அப்போது கருத்து எதுவும் கூறாத அனிருத் பல மாதங்களுக்குப் பிறகு, அப்படத்தை வெளியிட்டதற்காக ஆண்ட்ரியாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருக்கிறார்.

கொலைவெறி நாயகன்...
தனுஷ் நடிப்பில், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவான ‘3' படத்தின் மூலம் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் அனிருத். ‘ஒய் திஸ் கொலை வெறி' என்ற ஒற்றைப் பாடலின் மூலம் புகழின் உச்சிக்குப் போனார்.

பாடகி ஆண்ட்ரியா....
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா, சிறந்த நடிகை மட்டுமல்ல, நல்ல பாடகியும் கூட.

முத்தப் போட்டோ...
சில மாதங்களுக்கு முன்னர், இருவரும் லிப் டு லிப் முத்தம் பரிமாறிக்கொண்ட போட்டோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சாரி அண்ட் தேங்க்ஸ்...
தற்போது, அப்போட்டோ குறித்து கருத்து தெரிவித்துள்ள அனிருத், ‘நடந்த சம்பவத்துக்கு நான் ஆண்ட்ரியாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதுடன் போட்டோ சம்பந்தமாக அவர் வெளியிட்ட கருத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

எல்லாம் பப்ளிக்குட்டிக்காகத் தான்...
ஆனால், சினிமா வட்டாரத்தில் உள்ள சிலரோ, ‘இது அனிருத் தனது சுய விளம்பரத்துக்காக வெளியிட்ட போட்டோ. அதனால் தான் தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்' எனக் கருத்ஹ்டு தெரிவிக்கின்றனர்.

சூப்பரின் ‘சூப்பர்’ அட்வைஸ்...
தற்போது ஹீரோ வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டிக் கொண்டிருக்கும் வேலையில், இப்படத்திப் பார்த்து சூப்பர்ஸ்டாரும் அனிருத்திற்கு அட்வைஸ் செய்தது ஏற்கனவே நாமறிந்த கதை தான்.


Click it and Unblock the Notifications











