Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பீப் பாடல்: கோவை போலீசாரிடம் நேரில் விளக்கமளித்த அனிருத்
சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் இசையமைப்பாளர் அனிருத் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் முன் நேரடியாகத் தோன்றி விளக்கம் அளித்திருக்கிறார்.
பீப் பாடல் விவகாரத்தில் கோவை போலீசார் முன் வருகின்ற 29 ம் தேதி ஆஜராகுமாறு நடிகர் சிம்புவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கனடாவில் இருந்து இந்தியா திரும்பிய அனிருத் நேற்று இரவு 11 மணியளவில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் சென்று பீப் பாடல் விவகாரத்தில் தனது விளக்கத்தை அளித்திருக்கிறார்.
— Anirudh Ravichander (@anirudhofficial) January 12, 2016
மேலும் இந்தப் பாடலுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று சுமார் 2 பக்கக் கடிதம் ஒன்றையும் அவர் கொடுத்திருக்கிறார்.இது குறித்து "பீப் பாடல் விவகாரத்தில் கோவை போலீசாரிடம் நேரில் தோன்றி விளக்கம் அளித்தேன்.
இந்த விவகாரத்தில் ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அனிருத் கூறியிருக்கிறார்.
பீப் பாடல் விவகாரத்தில் முன்ஜாமீன் பெற்ற நடிகர் சிம்பு இன்னும் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் முன் ஆஜராகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.