Don't Miss!
- News இந்தியாவில் அமெரிக்காவின் ’பரம்பரை’ வரி தேவை என பேசிய பாஜக எம்பி.. மோடி பதில் என்ன? சீறும் காங்கிரஸ்
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
நான் மும்பையில, அவங்க சென்னையில... ! - ஆன்ட்ரியாவுடன் சேர்ந்தது குறித்து அனிருத்
முத்த சர்ச்சைக்குப் பிறகு ஆன்ட்ரியா என் படத்தில் பாடியது உண்மைதான். ஆனால் இருவரும் ஒரே இடத்தில் சேர்ந்து பணியாற்றவில்லை. நான் மும்பையில் இருந்தேன், அவர் சென்னையில் இருந்து பாடினார் என்று விளக்கம் அளித்துள்ளார் அனிருத்.
3 படத்தில் 'ஒய் திஸ் கொல வெறி' பாடலுக்கு இசையமைத்ததன் மூலம் பிரபலமானவர் அனிருத். இவர் ஆண்ட்ரியாவுடன் லிப் டு லிப் முத்தம் கொடுத்த படம் வெளியானதில் ஏக பரபரப்பு கிளம்பியது.
இந்தப் படத்தை அனிருத்தே வெளியிட்டுவிட்டார் என செய்தி வெளியானதால் அனிருத்தை மீடியாவில் திட்டிவிட்டார் ஆண்ட்ரியா. இனி எங்களுக்குள் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்தார்.
ஆனால் இப்போது இருவரும் இணைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு அடையாளமாக அனிருத் இசையில் மீண்டும் வணக்கம் சென்னை படத்தில் ஆண்ட்ரியா பாடியதாக செய்தி வெளியானது.
இதை அனிருத் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "வணக்கம் சென்னை படத்தில் எனது இசையில் 'எங்கடி பொறந்த எங்கடி பொறந்த' என்ற பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார் என்பது உண்மைதான்.
இந்தபாடலின் ஒரு பகுதிக்காக நான் மும்பையில் ரெக்கார்டிங் செய்து கொண்டிருந்தேன். அதே வேளையில் ஆண்ட்ரியாவுடன் எனது உதவியாளர் சென்னையில் ரெக்கார்டிங் செய்துகொண்டிருந்தார். ஆகையால் நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றவில்லை," என்றார்.
அடேங்கப்பா.. இது ரொம்பப் புதுசா இருக்கே!!