Don't Miss!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- News பாமக டி-ஷர்ட் போட்ட 4 பேர்.. அம்பேத்கர் சிலை குண்டு வீச்சு விவகாரத்தில் வன்னி அரசு பரபரப்பு ட்வீட்!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இவ்வளவு ஈசியா EPF பாஸ்புக் டவுன்லோட் செய்ய முடியுமா.. சிம்பிள் ஸ்டெப்ஸ்!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே அணியில் குளறுபடி.. தீபக் சாஹரை நம்பாத ருதுராஜ்.. தோல்விக்கு காரணமே இதுதான்
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'நானும் ரவுடிதான்' ஹீரோ ரோலில் நடிக்க முடிவெடுத்த இசையமைப்பாளர்.. மனதை மாற்றிய ரஜினியின் அட்வைஸ்!!
சென்னை: இயக்குநர் விக்நேஷ் சிவன் பல போராட்டங்களுகுப் பிறகுதான் தன்னுடைய முதல் படமான போடா போடியை ரிலீஸ் செய்தார். அந்தப் பிரச்சனை அவருடைய இரண்டாவது படத்துக்கும் தொடர்ந்தது.
நானும் ரவுடிதான் திரைப்படத்தின் கதையை எழுதிவிட்டு விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளார். ஆனால் முதலில் அவருக்கு அந்தக் கதாப்பாத்திரம் செட் ஆகுமா என்ற சந்தேகத்தில் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். அதன் பின்னர் பல கதாநாயகர்களிடம் கதை சொல்லியுள்ளார் விக்னேஷ்.
ஹீரோ காதாப்பாத்திரம் மட்டுமின்றி ஹீரோயின் கதாப்பாத்திரங்களில் நடிக்கக் கூட யாரும் முன் வரவில்லையாம். யாருக்கும் தன் கதை புரியவில்லையோ என்று சமீபத்தில் விக்னேஷ் கூறியிருந்தார்.
என் அன்பான கணவரை இழந்து வாடுகிறேன்.. தவறான தகவலை பரப்பாதீங்க.. நடிகை மீனா வேண்டுகோள்!
விஜய் சேதுபதி
பல ஹீரோக்களிடம் சுற்றித் திரிந்த கதையில் அவ்வப்போது பல மாற்றங்களையும் செய்து கொண்டே இருந்துள்ளார் விக்னேஷ். அப்படிப்பட்ட ஒரு தருணத்தில்தான் மீண்டும் விஜய் சேதுபதியிடம் கதை சொல்லியுள்ளார். இரண்டாம் முறை கேட்டதும் அவருக்கு கதை பிடித்துப் போய் படத்தில் நடிக்க சம்மதித்தார்.
அனிருத்
பல நடிகர்களிடம் கதை சொல்லியிருந்தாலும், இசையமைப்பாளராக அனிருத்தை மட்டுமே மனதில் வைத்திருந்தார் விக்னேஷ். ஒரு கட்டத்தில் யாரும் நடிக்க வரவில்லை என்றதும் அனிருத்தையே ஹீரோவாக்கிவிடலாம் என்ற முடிவுக்கு வந்து அவரிடமும் கேட்டுள்ளார். அனிருத்தும் அதில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ரஜினி அட்வைஸ்
இந்தச் செய்திகள் அப்போது ஊடகங்களில் பிரபலமாக பேசப்பட்ட போது, அனிருத்தின் உறவினரான நடிகர் ரஜினிகாந்த் அதனை கேள்விப்பட்டு அனிருத்தை அழைத்து பேசியுள்ளாராம். உங்களுக்கு யாரைப் போன்று வர வேண்டும் என்று ஆசை. சினிமாவிற்கு எதற்கு வந்தீர்கள் என்று கேட்க, AR ரகுமான்தான் தனக்கு இன்ஸ்பிரேஷன். அவரைப் போல் இசைத் துறையில் சாதிக்க வேண்டும் என்று சொல்ல, அதனையே பின்பற்றுங்கள். தடம் மாறி விடாதீர்கள் என்று அவர் அட்வைஸ் கூறியுள்ளாராம். அதன் பின்னர்தான் அனிருத் அந்த முடிவை கைவிட்டதாக கூறப்படுகிறது.
Recommended Video
நயன்தாரா எண்ட்ரி
அனிருத் நடிக்காததால்தான் இன்று விக்ரம் வரை உயர்ந்திருக்கிறார். இன்னொரு பக்கம் நயன்தாரா அந்தப் படத்தில் நடித்ததால்தான் இன்று விக்னேஷ் சிவன் கரத்தை பிடித்திருக்கிறார். விஜய் சேதுபதி டேட்ஸ் கிடைத்தவுடன், தனுஷ் அந்தப் படத்தை தயாரிக்க முன் வந்திருக்கிறார். நயன்தாராவை ஹீரோயினாக நடிக்க வைக்கலாம் என்று அவர் கூற, விஜய் சேதுபதி உடல் எடையையெல்லாம் குறைத்து நடித்தது குறிப்பிடத்தக்கது. எந்த ஹீரோயினும் ரசித்துக் கூட கேட்காத நானும் ரவுடிதான் கதையை நயன்தாரா மட்டும் விழுந்து விழுந்து சிரித்தபடி கேட்டதாக விக்னேஷ் சமீபத்தில் கூறியுள்ளார்.