Don't Miss!
- News அள்ள அள்ள தங்கம்.. பளபளன்னு ஜொலித்த நகைகள்.. திருவண்ணாமலை பேங்க்கில் நுழைந்த ஆபீசர்ஸ்.. அடக்கடவுளே
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸைமிஸ் பண்ணிடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அனிருத் மீதான ஆபாச வீடியோ புகார்- ரஜினி மைத்துனர் நேரில் விளக்கம்
சென்னை: பெண்களை கேவலப்படுத்தும் வக்கிரமான ஆபாச வீடியோ வெளியிட்டது தொடர்பாக இசையமைப்பாளர் அனிருத் மீது தரப்பட்டுள்ள போலீஸ் புகாருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார் அனிருத்தின் தந்தை.
சென்னை ஆர்.கே.நகரைச் சேர்ந்த ஜெபதாஸ் பாண்டியன், பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஒரு புகார் மனு அளித்தார்.
ஆபாச வீடியோ
அந்த மனுவில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்த "எய்ன்ட் நோபடி' என்ற ஆங்கில இசை ஆல்பத்தின் டிரெய்லர் "யூ-டியூப்' உள்ளிட்ட இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் பெண்களையும், தாய்மையையும் கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பாடல்களில் பெண்களுக்கு எதிராகவும், மத உணர்வைத் தூண்டும் வகையிலும் வரிகள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பாடல்களால் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படும். மேலும் இந்த ஆல்பம், உரிய அனுமதியின்றி வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி அனிருத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தார்.
விசாரணைக்கு உத்தரவு
இந்தப் புகார் குறித்து விசாரணை செய்ய ஆணையர் ஜார்ஜ், மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்தின் மைத்துனரும், அனிருத்தின் தந்தையும், நடிகருமான ரவி ராகவேந்தர் செவ்வாய்க்கிழமை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தார்.
ரவி ராகவேந்தர் விளக்கம்
இது தொடர்பாக ரவி ராகவேந்தர் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயக்குமாரை சந்திதார். அவரிடம் ஆல்பம் குறித்து ரவி ராகவேந்தர் விளக்கமளித்தார்.
நீக்கம்
மேலும் புகாரில் கூறப்பட்டுள்ள இணையதளங்களில் இருந்து அந்த ஆல்பத்தின் டிரெய்லர்கள் நீக்கப்பட்டுவிட்டதாக கூறினாராம். இதையடுத்து போலீஸ் தரப்பில் அந்த புகார் மனு தொடர்பாக விசாரணைக்கு அழைத்தால் முழு ஒத்துழைப்பு தரும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.
-
Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலீஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?
-
குடிக்கிற காஃபியில் எதையோ கலந்த நடிகை.. பேச முடியாமல் திணறிய ரஜினி.. குட்டி பத்மினி சொன்ன சீக்ரெட்
-
இதுக்கு இல்லையா சார் ஒரு முடிவு?.. மீண்டும் பைக் டூர் கிளம்பிட்டாரா அஜித்?.. அப்போ விடாமுயற்சி