Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சோதனைகளை கடந்து சாதனை படைக்க வேண்டும் - அனிருத்
சென்னை: தனது வாழ்வில் நடந்த சோதனைகளைக் கடந்து சாதனை படைக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் அனிருத் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் நடந்த ஐஐஎப்ஏ உத்சவ விழாவில் சிறந்த இசையமைப்பாளர் விருது இளம் இசையமைப்பாளர் அனிருத்திற்கு கிடைத்தது.
மாரி படத்தின் இசைக்காக அவர் இந்த விருதைப் பெற்றார். விழா மேடையில் அவர் பேசும்போது "இந்த மேடையில் நிறைய பேசவேண்டும்.
சில நாட்களாகவே நிறைய சோதனைகள் வந்து விட்டது. ஆனால் அந்த சோதனைகளை கடக்க வேண்டும். அப்போதுதான் சாதனை படைக்க முடியும்.
Thank you IIFA and to all the fans for Best Music Director.. Happy to take home the first IIFA for the South :) pic.twitter.com/zntlyg7mYU
— Anirudh Ravichander (@anirudhofficial) January 25, 2016
இந்த விருதிற்கு என்னைத் தேர்ந்தெடுத்த ஐஐஎப்ஏ மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.முதல் முறையாக இந்த விருதை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறேன்.
இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது" இவ்வாறு அனிருத் கூறினார். சமீபத்தில் பீப் பாடல் பிரச்சினையில் அனிருத்தின் பெயர் சிக்கியது.
இதனால் படுவேகமாக இவரின் மார்க்கெட் சரிந்து தற்போது வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது. இவர் கைவசம் இருந்த படங்கள் வேறு இசையமைப்பாளர்களின் கரங்களுக்கு சென்று விட்டன.
இதைத்தான் அனிருத் சோதனைகளைக் கடந்து சாதனை படைக்க வேண்டும் என்று மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார். தற்போது தன்மீது உள்ள களங்கத்தை துடைக்கும் வகையில் காதலர் தினத்தில் பெண்களின் பெருமையை எடுத்துக் கூறும் ஆல்பம் ஒன்றை வெளியிடுகிறார்.
மேலும் அஜீத்தின் அடுத்த படத்திலும் அனிருத்தை ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறுகின்றனர். இதனால் பழையபடி அனிருத் மீண்டு வரும் காலம் தொலைவில் இல்லை என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி கொண்டிருக்கின்றனர்.