Don't Miss!
- News சர்ச்சை கருத்து: பிரதமர் மோடி இப்படி பேசுறதுக்கு காரணமே இதுதான்.. போட்டு தாக்கிய நடிகர் பிரகாஷ் ராஜ்
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சோதனைகளை கடந்து சாதனை படைக்க வேண்டும் - அனிருத்
சென்னை: தனது வாழ்வில் நடந்த சோதனைகளைக் கடந்து சாதனை படைக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் அனிருத் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் நடந்த ஐஐஎப்ஏ உத்சவ விழாவில் சிறந்த இசையமைப்பாளர் விருது இளம் இசையமைப்பாளர் அனிருத்திற்கு கிடைத்தது.
மாரி படத்தின் இசைக்காக அவர் இந்த விருதைப் பெற்றார். விழா மேடையில் அவர் பேசும்போது "இந்த மேடையில் நிறைய பேசவேண்டும்.
சில நாட்களாகவே நிறைய சோதனைகள் வந்து விட்டது. ஆனால் அந்த சோதனைகளை கடக்க வேண்டும். அப்போதுதான் சாதனை படைக்க முடியும்.
Thank you IIFA and to all the fans for Best Music Director.. Happy to take home the first IIFA for the South :) pic.twitter.com/zntlyg7mYU
— Anirudh Ravichander (@anirudhofficial) January 25, 2016
இந்த விருதிற்கு என்னைத் தேர்ந்தெடுத்த ஐஐஎப்ஏ மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.முதல் முறையாக இந்த விருதை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறேன்.
இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது" இவ்வாறு அனிருத் கூறினார். சமீபத்தில் பீப் பாடல் பிரச்சினையில் அனிருத்தின் பெயர் சிக்கியது.
இதனால் படுவேகமாக இவரின் மார்க்கெட் சரிந்து தற்போது வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது. இவர் கைவசம் இருந்த படங்கள் வேறு இசையமைப்பாளர்களின் கரங்களுக்கு சென்று விட்டன.
இதைத்தான் அனிருத் சோதனைகளைக் கடந்து சாதனை படைக்க வேண்டும் என்று மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார். தற்போது தன்மீது உள்ள களங்கத்தை துடைக்கும் வகையில் காதலர் தினத்தில் பெண்களின் பெருமையை எடுத்துக் கூறும் ஆல்பம் ஒன்றை வெளியிடுகிறார்.
மேலும் அஜீத்தின் அடுத்த படத்திலும் அனிருத்தை ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறுகின்றனர். இதனால் பழையபடி அனிருத் மீண்டு வரும் காலம் தொலைவில் இல்லை என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி கொண்டிருக்கின்றனர்.
-
இதுக்கு இல்லையா சார் ஒரு முடிவு?.. மீண்டும் பைக் டூர் கிளம்பிட்டாரா அஜித்?.. அப்போ விடாமுயற்சி
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!