Don't Miss!
- News கிருஷ்ணகிரியில் விழுந்த "அடி".. சரியான பதிலடி தந்த "வேங்கைவயல்".. ஒருத்தரும் ஓட்டுப்போட வரலயாமே
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எங்க காலத்தில் ரொம்ப மோசம்: படுக்கைக்கு அழைப்பது பற்றி விக்ரம் ஹீரோயின் பேட்டி
Recommended Video
மும்பை: படுக்கைக்கு அழைத்த பிரச்சனை தனக்கும் ஏற்பட்டதாக நடிகை அனிதா தெரிவித்துள்ளார்.
மனோஜ் பாரதிராஜா நடித்த வருஷமெல்லாம் வசந்தம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் அனிதா. அதையடுத்து அவர் விக்ரமின் சாமுராய் படத்தில் நடித்தார்.
சுக்ரன் படத்திற்கு பிறகு அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தற்போது அவர் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
படுக்கை
சினிமா துறையில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்கிறார் அனிதா. நல்ல வேளை எனக்கு தயாரிப்பாளர் ஏக்தா கபூர் கிடைத்தார். நல்ல ஆரம்பம் இருந்தால் நல்ல பயணம் இருக்கும். இருப்பினும் போராடத் தான் செய்தேன் என்று அனிதா தெரிவித்துள்ளார்.
ஆமாம் நடந்தது
எனக்கும் தான் அது நடந்தது. நாம் சரியாக யோசித்து அந்த விஷயத்தில் இருந்து வெளியே வர வேண்டும். என்ன செய்ய, துறை அப்படி உள்ளது. ஆனால் தற்போது நிலைமை எவ்வளோ பரவாயில்லை. எங்கள் காலத்தில் எல்லாம் ரொம்ப மோசம். நான் சொல்வது தவறாக கூட இருக்கலாம் என்கிறார் அனிதா.
பேசலாம்
படுக்கைக்கு அழைக்கப்படுவது குறித்து பாலிவுட் நடிகைகள் பேசி வரும் நிலையில் டிவி சீரியல்களில் நடித்து வரும் அனிதாவும் அதையே தெரிவித்துள்ளார்.
சீரியல்
நாகினி சீரியலின் 3வது சீசனில் அனிதா பிசியாக உள்ளார். அனிதா விஷ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மூன்றாவது சீசன் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.