twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எங்க காலத்தில் ரொம்ப மோசம்: படுக்கைக்கு அழைப்பது பற்றி விக்ரம் ஹீரோயின் பேட்டி

    By Siva
    |

    Recommended Video

    படுக்கைக்கு அழைப்பது பற்றி விக்ரம் ஹீரோயின் பேட்டி

    மும்பை: படுக்கைக்கு அழைத்த பிரச்சனை தனக்கும் ஏற்பட்டதாக நடிகை அனிதா தெரிவித்துள்ளார்.

    மனோஜ் பாரதிராஜா நடித்த வருஷமெல்லாம் வசந்தம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் அனிதா. அதையடுத்து அவர் விக்ரமின் சாமுராய் படத்தில் நடித்தார்.

    சுக்ரன் படத்திற்கு பிறகு அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தற்போது அவர் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

    படுக்கை

    படுக்கை

    சினிமா துறையில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்கிறார் அனிதா. நல்ல வேளை எனக்கு தயாரிப்பாளர் ஏக்தா கபூர் கிடைத்தார். நல்ல ஆரம்பம் இருந்தால் நல்ல பயணம் இருக்கும். இருப்பினும் போராடத் தான் செய்தேன் என்று அனிதா தெரிவித்துள்ளார்.

    ஆமாம் நடந்தது

    ஆமாம் நடந்தது

    எனக்கும் தான் அது நடந்தது. நாம் சரியாக யோசித்து அந்த விஷயத்தில் இருந்து வெளியே வர வேண்டும். என்ன செய்ய, துறை அப்படி உள்ளது. ஆனால் தற்போது நிலைமை எவ்வளோ பரவாயில்லை. எங்கள் காலத்தில் எல்லாம் ரொம்ப மோசம். நான் சொல்வது தவறாக கூட இருக்கலாம் என்கிறார் அனிதா.

    பேசலாம்

    பேசலாம்

    படுக்கைக்கு அழைக்கப்படுவது குறித்து பாலிவுட் நடிகைகள் பேசி வரும் நிலையில் டிவி சீரியல்களில் நடித்து வரும் அனிதாவும் அதையே தெரிவித்துள்ளார்.

    சீரியல்

    சீரியல்

    நாகினி சீரியலின் 3வது சீசனில் அனிதா பிசியாக உள்ளார். அனிதா விஷ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மூன்றாவது சீசன் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Actress Anita Hassanandani said in an interview that she too faced casting couch issue but one has to handle herself correctly and get out of that situation.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X